என் மலர்

    நீங்கள் தேடியது "tamil news"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".
    • இப்படத்தை T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

    அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் கடந்த மாதம் வெளியானது. T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

    வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

    ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன். ஒரு பிளே பாய் கதாப்பாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார்.

    அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார்
    • இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.

    2016 ஆம் ஆண்டு ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ஷிரிஷ், பாபி சிம்ஹா , சென்ராயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெட்ரோ. சென்னையில் நடக்கும் செயின் ஸ்னாட்சிங் பற்றியும், இளைஞர்கள் எப்படி இந்த தொழிலுக்கு வருகிறார்கள் எதற்காக இப்படி செய்கின்றனர் என்று பேசிய திரைப்படம், படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அதைத்தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார். . படத்தை சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.

    'ராபர்' படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

    இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர். இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.

    இந்த' ராபர்' திரைப்படம் படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இப்படம் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.
    • ரத்னம் படத்தின் மூன்று 'சிங்கிள்' பாடல்கள் ஏற்கனவே வெளியானது.

    நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி இருக்கிறார். அவரது இயக்கத்தில் 3வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார்.

    இது விஷாலுக்கு 34- வது படமாகும். இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர்.

    கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடந்து வருகின்றன.

    இப்படத்தின் மூன்று 'சிங்கிள்' பாடல்கள் ஏற்கனவே வெளியானது.

    இந்நிலையில் நான்காவது சிங்கிளான "எதுவரையோ.." பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பின்னணி பாடகரான ஹரிஹரன் இப்பாடலை பாடியுள்ளர்.

    இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன்
    • நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் .

    அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் கடந்த மாதம் வெளியானது. T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

    வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்பொழுது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசரை விஜய் ஆண்டனி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். 

    ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன். ஒரு பிளே பாய் கதாப்பாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார்.

    அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் .

    இவர்களுடன் அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார்.

    ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படமும் வெற்றியடையும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும்.
    • ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

    1984 ஆம் ஆண்டு 'ஏப்ரல் 18' படத்தின் மூலம் கதாநாயகியாக மலையாள சினிமாவிற்கு அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு கமல் நடித்து வெளியான எனக்குள் ஒருவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார் ஷோபனா.

    பின் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தார்.

    அதன் பின் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி உள்பட ஏராளமான படங்களில் நடித்து வந்தார். கடைசியாக இவர் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தில் நடித்தார்.

    இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக ஷோபனா இணைய தளத்தில் சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும். மோகன்லாலுக்கு இது 360 - வது படம் ஆகும். ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

    இவர்கள் இணைந்து நடித்த மணிச்சித்திரதாழு, தென்மாவின் கொம்பத், பால கோபாலன் எம்.ஏ, பவித்ரம், மின்னாரம் ஆகிய படங்கள் மிகப் பெரிய படங்களாக அமைந்தது. ஷோபனா மற்றும் மோகன்லால் ரீல் ஜோடியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள்.

    தற்பொழுது அவர்கள் நடிக்கும் படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். தரூண் மூர்த்தி இதற்கு முன் ஆப்ரேஷன் ஜாவா படத்தை இயக்கியவர் ஆவார்.

    இப்படத்திற்கு தற்காலிகமாக 'எல் -360 'என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

     

    கடைசியாக மோகன்லால் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் நடித்தார். படம் எதிர்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை, எல் 360 படம் வெற்றியடைய வேண்டும் என மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. இது குறித்து மோகன்லால் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹண்டர் படத்தை வெங்கட் மோகன் இயக்கவுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
    • அதிகாரம் படத்தின் கதை வெற்றிமாரன் எழுதியுள்ளார்.

    ராகவா லாரன்ஸ் 2002 ஆம் ஆண்டு வெளியான 'பார்த்தாலே பரவசம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு முன் பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் இருந்துள்ளார்.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் நடித்தார். லாரன்ஸுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் சஞ்சனா நட்ராஜன் நடித்திருப்பர். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 'பென்ஸ்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 2 ஆம் படம் இது.

    அதையடுத்து ராகவா லாரன்சின் 25-வது திரைப்படமாக 'ஹண்டர்' படத்தில் நடிக்கவுள்ளார். ஹண்டர் படத்தை வெங்கட் மோகன் இயக்கவுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

    இதற்கு முன் விஷால் நடிப்பில் வெளிவந்த அயோக்யா படத்தை இவர் இயக்கியுள்ளார். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் உடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அடுத்ததாக அறிமுக இயக்குனரான துரை செந்தில் குமார் இயக்கத்தில் அதிகாரம் படத்தில் நடிக்கவுள்ளார். அதிகாரம் படத்தின் கதை வெற்றிமாரன் எழுதியுள்ளார். இப்படம் 2 வருடங்களுக்கு முன் ஆரம்பித்து படப்பிடிப்பு பணிகள் பாதியிலேயே நிற்கப்பட்டது. இப்பொழுது மீண்டும் இப்படத்தை எடுக்கவுள்ளனர். கதிரேசன் மற்றும் வெற்றிமாறன் இப்படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

    இதுக்குறித்து ராகவா லாரன்ஸ் அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் வணக்கம் நண்பர்களே மற்றும் ரசிகர்களே, வெற்றி மாறன் சார், அதிகாரத்தின் படப்பிடிப்பு ஸ்கிரிப்டைப் பற்றி கூறியதைக் கேட்டு நான் மிரண்டுவிட்டேன், மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. வெற்றி மாறன் சார் எழுதிய ஒரு பிரமாண்டமான படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். நான் முன்பு அறிவித்த இரண்டு படங்களுக்கு பிறகு இந்த படத்தில் வேலை செய்ய நான் காத்திருக்கிறேன். இந்த அற்புதமான திரைக்கதையை எனக்கு வழங்கிய வெற்றி மாறன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள், இது காத்திருப்புக்கு மதிப்பானது மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஐயா இதை நடந்ததற்கு. உங்கள் அனைவரின் ஆசிகளும் எனக்கு வேண்டும். என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்தனர்.
    • ஷெரிஃப் இயக்கத்தில் வெளியான ரணம் அறம் தவறேல் நடித்தார்.

    சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

    கப்பல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்தனர். மேயாத மான் ஒரு ஃபீல் குட் படமாக அமைந்தது. மக்கள் அனைவராலும் ரசிக்கப்பட்ட படம். இதனால் வைபவின் புகழ் ஓங்கியது.

    பின் பிப்ரவரி மாதம் ஷெரிஃப் இயக்கத்தில் வெளியான ரணம் அறம் தவறேல் நடித்தார். நந்திதா ஸ்வேதா மற்றும் டான்யா ஹோப் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருந்தனர். இப்படம் வைபவிற்கு 25 ஆவது படமாகும். ரணம் அறம் தவறேல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கவுள்ளனர். படப்பிடிப்பு பணிகள் சென்ற வாரம் நிறைவடைந்தது. அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் வைபவை வாழ்த்தி படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். படம் வெளியாகும் தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரீத்தி அஸ்ரானி அப்பாவி முகத்துடன் தன் அம்மாவை இழந்த துக்கத்தை மிகத் திறம்பட அயோத்தி படத்தில் நடித்திருப்பார்.
    • பிரீத்தி அஸ்ரானி அடுத்ததாக கவினின் 5 வது படத்தில் நடித்து வருகிறார்.

    சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குனரான மந்திர மூர்த்தி இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு அயோத்தி திரைப்படம் வெளியாகியது. யாஷ்பால் ஷர்மா, பிரீத்தி அஸ்ரானி, புகழ், போஸ் வெங்கட் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பர்.

    பிரீத்தி அஸ்ரானி அப்பாவி முகத்துடன் தன் அம்மாவை இழந்த துக்கத்தை மிகத் திறம்பட அயோத்தி படத்தில் நடித்திருப்பார். அயோத்தி திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

    இதைத் தொடர்ந்து பிரீத்தி அஸ்ரானி அடுத்ததாக கவினின் 5 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடன இயக்குனரான சதீஷ் இயக்கி வருகிறார். இது ஒரு ஜாலியான நகைச்சுவை கதைக்கள பிண்ணனியில் உருவாகவுள்ளது. அயோத்தியில் நான் நடித்த கதாப்பாத்திரத்தை விட இது முற்றிலும் மாறுப்பட்டது என்று சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

    இதற்கடுத்து ரியோ நடிக்கும் அடுத்த படத்திலும் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறியுள்ளார் பிரீத்தி அஸ்ரானி.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ‘தி கோட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தமிழ் புத்தாண்டிற்கு வெளியானது

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷியாவில் நடந்து வருகிறது. படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தமிழ் புத்தாண்டிற்கு வெளியானது. மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது.

    இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    'தி கோட்' படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு 5, 6 முறை எங்கள் வீட்டுக்கு வந்து விஜய் நடித்து வரும் படத்தில் விஜயகாந்த் தோற்றம் இடம்பெறுவது பற்றி என்னிடம் அனுமதி கேட்டார்.

    ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார். விஜய்யும் தேர்தலுக்குப் பிறகு என்னை சந்திப்பதாக கூறி இருந்தார்.

    விஜயகாந்த் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருந்து நான் யோசிக்க வேண்டும் அவர் இருந்திருந்தால் அவர் விஜய்க்கு என்ன சொல்லி இருப்பார்? செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்யை கேப்டன் அறிமுகப்படுத்தியது உலகத்துக்கே தெரியும்.

    எஸ்.ஏ. சந்திரசேகர் மீதும் விஜய் மீதும் அவருக்கு எப்போதும் மிகப் பெரிய பாசம் உண்டு. எனவே ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் கேப்டனை படத்தில் கொண்டு வருவது குறித்து அவர்கள் கேட்கும் போது விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக மறுப்பு தெரிவித்து இருக்க மாட்டார்.

    விஜய் என்னை வந்து சந்திக்கும்போது நல்ல முடிவாக கூறுகிறேன் என்று சொன்னேன். வெங்கட் பிரபுவிடம் உனக்கும் விஜய்க்கும் என்னால் நோ சொல்ல முடியாது என்று அந்த நேர் காணலில் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராகவா லாரன்ஸ் 2002 ஆம் ஆண்டு வெளியான ’பார்த்தாலே பரவசம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.
    • லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 'பென்ஸ்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

    ராகவா லாரன்ஸ் 2002 ஆம் ஆண்டு வெளியான 'பார்த்தாலே பரவசம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு முன் பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் இருந்துள்ளார்.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் நடித்தார். லாரன்ஸுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் சஞ்சனா நட்ராஜன் நடித்திருப்பர். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அடுத்ததாக 'அதிகாரம்' மற்றும் 'துர்கா' போன்ற படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 'பென்ஸ்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

    அதையடுத்து ராகவா லாரன்சின் 25-வது திரைப்படமாக 'ஹண்டர்' படத்தில் நடிக்கவுள்ளார். ஹண்டர் படத்தை வெங்கட் மோகன் இயக்கவுள்ளார்.

    இதற்கு முன் விஷால் நடிப்பில் வெளிவந்த அயோக்யா படத்தை இவர் இயக்கியுள்ளார். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் உடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்திரைப்படத்தை ஜிடெலி பிலிம்ஸ் மற்றும் சத்திய ஜோதி நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் ஹண்டர் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் 2025 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாவுள்ளது.

    படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2002 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகியது ஜெமினி திரைப்படம்
    • இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    2002 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பபை பெற்றது. படத்தின் பாடல்களும் செம ஹிட் ஆனது.

    படம் வெளியாகி 22 வருடங்களான நிலையில், ஜெமினி பட போஸில் நடிகர் விக்ரம் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் "என்மேல் அன்பு பொழியும் எல்லோருக்கும் மிக்க நன்றி. சுவாரசியமான அப்டேட் இன்னும் சில தினங்களில் எனி கெஸ்சஸ்?" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதன்மூலம், ஜெமினி படம் ரீ-ரிலிஸ் ஆக வாய்ப்புள்ளது என்றும், வரும் ஏப்ரல் 17ம் தேதி இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சமீபத்தில் நடித்து வெளியான 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான ’கண்ட 'கண்ட நாள் முதல்’ படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார்

    விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அசோக் செல்வன். அதற்கடுத்து 2014 ஆம் ஆண்டு வெளியான தெகிடி படத்தின் மூலம் கதாநாயகானார்.

    தொடர்ந்து நல்ல கதைகளையும் , நல்ல கதாப்பாத்திரத்தையும் தேடி தேடி நடித்து வருகிறார் அசோக் செல்வன். ஓ மை கடவுளே , சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், சபா நாயகன் மற்றும் ப்ளூ ஸ்டார் போன்ற பல ஹிட்டான படங்களில் நடித்தார்.

    அவர் சமீபத்தில் நடித்து வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக 'பொன் ஒன்று கண்டேன்' படத்தில் நடித்துள்ளார். அசோக் செல்வனுடன் ஐஷ்வர்யா லக்ஷ்மி மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார்.

    ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடாமல் நேராக ஜியோ சினிமாவில் வெளியிடுகிறார்கள் மக்கள் அனைவரும் இலவசமாக ஜியோ சினிமா செயலி மூலம் இப்படத்தை காணலாம்.

    தற்பொழுது படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×