என் மலர்

    நீங்கள் தேடியது "film shooting"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீலீலா தமிழில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் படமாக இருந்துவிட கூடாது என்பதால் நிராகரித்து விட்டார்
    • எதிர்காலத்தை மனதில் கொண்டு அந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், நிதின் சத்யா, வைபவ், பிரேம்ஜி, பார்வதி நாயர் நடிக்கின்றனர்




    இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார் GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

    கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் கதைக்கும் மாஸ்கோவுக்கும் சம்பந்தம் இருப்பதால் தான் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்

    மேலும் இப்படத்தின் ஒரு பாடலுக்கு திரிஷா நடனமாட உள்ளதாக தகவல் வெளியானது.




    அதைத்தொடர்ந்து திரிஷாவுக்கு பதில் தெலுங்கில் தொடர்ந்து முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வரும் இளம் நடிகை ஸ்ரீலீலாவை ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாட வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டார். இது தொடர்பாக அந்த நடிகையுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

    ஸ்ரீலீலா தமிழில் தனது முதல் படம் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடும் படமாக இருந்துவிட கூடாது என்பதால் அந்த வாய்ப்பை தற்போது நிராகரித்து விட்டார் என்கிற தகவல் தற்போது வெளியானது.



    நடன திறமை கொண்ட ஸ்ரீலீலா விஜயுடன் இணைந்து நடனம் ஆடும்போது தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பு கிடைக்கும் என தெரிந்தும் எதிர்காலத்தை மனதில் கொண்டு அந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலாவை ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாட வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார்.
    • இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை யொட்டி திரையரங்குகளில் 'ரிலீஸ்' ஆக உள்ளது.

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், நிதின் சத்யா, வைபவ், பிரேம்ஜி, பார்வதி நாயர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

    இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார் GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

    கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் கதைக்கும் மாஸ்கோவுக்கும் சம்பந்தம் இருப்பதால் தான் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்

    மேலும் இப்படத்தின் ஒரு பாடலுக்கு திரிஷா நடனமாட உள்ளதாக தகவல் வெளியானது.




    இந்நிலையில் திரிஷாவுக்கு பதில் தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலாவை ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாட வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அந்த நடிகையுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    'கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை யொட்டி திரையரங்குகளில் 'ரிலீஸ்' ஆக உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விஜயகாந்திற்கு எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் விஜய் மீது நல்ல மரியாதை உண்டு.
    • நடிகர் விஜய் இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்திப்பார் என கூறப்படுகிறது.

    ஏஜிஎஸ்' பட நிறுவன தயாரிப்பில் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இது விஜய் க்கு 68- வது படமாகும். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மோகன், மீனாட்சி சௌத்ரி,சினேகா, லைலா, ஜெயராம்,யோகிபாபு, ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.




    GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் பிரபல நடிகை திரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.

    மேலும் கடந்த மாதம் கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் விஜய் பங்கேற்று நடித்தார். அப்போது விஜய்க்கு கேரள ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் 'கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் துபாய் சென்றுள்ளார். 'கோட்' படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அறிவித்தது.




    இந்நிலையில், மறைந்த நடிகர் விஜய்காந்தை செயற்கை நுண்ணறிவு மூலம் 'கோட்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை பிரேமலதா விஜயகாந்த் தற்போது உறுதிபடுத்தியுள்ளார்.

    இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது :-

    "இயக்குநர் வெங்கட் பிரபு, ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மூலம் 'கோட் ' படத்தில் விஜயகாந்த் தொடர்பான காட்சி அமைப்பது குறித்து அனுமதி கேட்டு எங்கள் வீட்டிற்கு 5 அல்லது 6 முறை வந்தார். எனது மகன் சண்முகபாண்டியனிடமும் அவர் பேசினார். நடிகர் விஜய்யும் தேர்தலுக்கு பிறகு என்னை சந்திப்பதாக கூறினார்.




    விஜயகாந்திற்கு எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் விஜய் மீது நல்ல மரியாதை உண்டு. அவரது இயக்கத்தில் 17 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல், வெங்கட்பிரவுவை சிறு வயதில் இருந்தே எனக்கு நன்றாக தெரியும். அதனால் இதற்கு சம்மதம் தெரிவிக்க உள்ளேன்" என்றார்.

    இந்நிலையில் வருகிற தேர்தல் முடிந்த பிறகு நடிகர் விஜய் இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்திப்பார் என  கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை விமான நிலையம் வந்த நடிகர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டார்.
    • சென்னை விமான நிலையத்தில் தன்னை காண காத்திருந்த குட்டி குழந்தை ஒன்றை பார்த்து விஜய் கையசைத்தார்.

    'ஏஜிஎஸ்' பட நிறுவன தயாரிப்பில் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இது விஜய் க்கு 68- வது படமாகும். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மோகன், மீனாட்சி சௌத்ரி,சினேகா, லைலா, ஜெயராம்,யோகிபாபு, ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் பிரபல நடிகை திரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இந்தபடத்தின் 'ஷூட்டிங்' பல கட்டமாக நடந்தது.

    இறுதிகட்ட ஷூட்டிங் ரஷிய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் படமாக்கப்பட இருந்தது. இதற்கான 'ஷூட்டிங்' லொகேஷன் தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு கடந்த மாதம் சென்றார். அங்கு சினிமா சூட்டிங் தொடர்பான 'லொகேஷன்' இடங்களை பார்வையிட்டார்.




    மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் விஜய் பங்கேற்று நடித்தார். அப்போது விஜய்க்கு கேரள ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் 'கோட் 'படம் குறித்த முக்கிய 'அப்டேட்' இன்று வெளியானது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில் 'கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் தற்போது துபாய் சென்றுள்ளார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த நடிகர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டார்.

    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தன்னை காண காத்திருந்த குட்டி குழந்தை ஒன்றை பார்த்து விஜய் கையசைத்தார். அந்த குழந்தையுடன் விஜய் கொஞ்சி விளையாடினார்.இந்த வீடியோ இணைய தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விஜய் தனது ரசிகரின் குட்டி பெண் குழந்தையை தூக்கி கொஞ்சிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
    • இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இணையத்தளத்தில் 'கொடுத்து வச்ச குழந்தை' என 'கமெண்ட்ஸ்' பதிவு செய்து உள்ளனர்

    ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தபடத்தின் 'ஷூட்டிங்' பல கட்டமாக நடந்து வருகிறது. இறுதிகட்ட ஷூட்டிங் ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் நடக்க இருக்கிறது.

    இதற்கான ஷூட்டிங் லொகேஷன் தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்றார்.அங்கு சினிமா சூட்டிங் தொடர்பான 'லொகேஷன்' இடங்களை பார்வையிட்டு தேர்வு செய்தார்.

    இநிலையில் தற்போது விஜய்யின் 'கோட்' படப்பிடிப்புகேரளாவில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்றதில் இருந்தே ரசிகர்கள் அவரைக் காண கூட்டமாக அலைமோதி வருகின்றனர்.ரசிகர்கள் மத்தியில் விஜய் மலையாளத்தில் பேசி அசத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.




     

    இந்நிலையில் விஜய் தனது ரசிகரின் குட்டி பெண் குழந்தையை தூக்கி கொஞ்சிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

    மேலும் அந்த குழந்தையிடம் 'அங்கிளுக்கு' ஒரு 'உம்மா' கொடுங்க என நடிகர் விஜய் கேட்பது போன்ற காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்து உள்ளது.

    கேரள குழந்தையை தூக்கிக் கொண்டு கொஞ்சிய போது அந்த குழந்தையின் அம்மா, " அங்கிளுக்கு உம்மா ஒன்னு கொடு" என சொன்னதும் அந்த குழந்தை க்யூட்டாக விஜய் கன்னத்தில் முத்தம் கொடுத்தது. இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இணையத்தளத்தில் 'கொடுத்து வச்ச குழந்தை' என 'கமெண்ட்ஸ்' பதிவு செய்து உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவின் போக்குவரத்து விதிமீறல்கள் பலரால் விமர்சிக்கப்பட்ட ஒன்று
    • 2022ல் வெளியான இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்தார்

    கடந்த மாதம் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் ஒரு கருப்பு நிற கார் வேகமாக ஒரு சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருக்கும் இரண்டு கார்களின் மேல் மோதுகிறது. அதில் அந்த இரு கார்களும் முற்றிலும் சேதமடைந்து கவிழ்கின்றன. அருகே உள்ள மக்கள் இதனை கண்டு அலறியடித்து கொண்டு ஓடுகின்றனர்.

    ஒரு சிலர், கார்களிலிருந்து சிதறி காற்றில் பறக்கும் கண்ணாடி துண்டுகள் மற்றும் உலோகங்கள் தங்களை தாக்குவதில் இருந்து தப்பிக்க கீழே குனிந்து கொள்கின்றனர். இந்த வீடியோவுடன், "இது எந்த கார்? நல்ல வேளையாக உள்ளே யாரும் இல்லை. இந்தியா" என ஒரு குறுஞ்செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது.

    இந்தியாவின் போக்குவரத்து விதி மீறல்களும், சாலைகளின் தரமும், இந்தியர்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதும் பல முறை பலரால் உலகளவில் விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வீடியோ அத்தகைய கருத்துக்களுக்கு வலுவூட்டுவதாக சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.

    ஆனால், ஆய்வில் இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் உண்மையில்லை என்பதும், அந்த சம்பவம் நடைபெறுவது இந்தியாவிலேயே இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.

    தேடுதலில் இந்த வீடியோவின் முழுப்பகுதி கிடைத்தது. அதில் "ப்ரேக் நகரில் படப்பிடிப்பு" என குறிப்பிடப்பட்டுள்ளது. சாலையில் நிற்கும் இரு கார்களும், மக்கள் நடப்பதும், அதற்கு பிறகு கருப்பு கார் வந்து நின்று கொண்டிருக்கும் கார்களின் மேல் மோதுவதும், மக்கள் ஓடுவதும் மட்டுமல்லாமல் அதனுடன் சினிமா படப்பிடிப்பு கேமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்கள் ஆகியவை உள்ளதும் தெரிந்தது.

    மேலும் ஆய்வில், இவை 2022-ல் வெளியான "தி க்ரே மேன்" எனும் ஆங்கில திரைப்படத்தின் படப்பிடிப்பின் காட்சிகள் என்பதும் அந்த படப்பிடிப்பு செக் குடியரசின்தலைநகரான ப்ரேக் நகரில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதும் இந்த வீடியோ 2021 ஆண்டிலேயே வீடியோவாக வெளிவந்தது என்பதும் தெரிய வந்துள்ளது.

    இந்த ஆங்கில திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வனத்துறை அனுமதி பெற்று குணா குகை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் கேரள திரைத்துறையினர் படப்பிடிப்பு நடத்தினர்.
    • ஊட்டியை போல் கோடை காலங்களில் கொடைக்கானலிலும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வனத்துறைக்கு சொந்தமான மோயர்பாய்ண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண்பாறை உள்ளிட்ட ஏராளமான இடங்கள் உள்ளன. பேய்களின் சமையல்அறை என அழைக்கப்பட்ட இடத்தில் நடிகர் கமல்ஹாசனின் குணா திரைப்படம் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த இடம் பிரபலமானது. இதனால் குணா குகை என அழைக்கப்பட்டது. இங்கு 15க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தவறி விழுந்து இறந்துள்ளனர்.

    இதனால் குணா குகையை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இங்கு வனத்துறை அனுமதி பெற்று குணா குகை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் கேரள திரைத்துறையினர் படப்பிடிப்பு நடத்தினர். காலக்கெடு முடிந்த நிலையிலும் அங்கு தொடர்ந்து சினிமா படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மதுரையை சேர்ந்த வக்கீல் ரமேஷ் வன பாதுகாவலருக்கு மனு அனுப்பி உள்ளார். அதில் அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு நடத்தியது, மரங்களை வெட்டியது, விதிகளை மீறி அனுமதிக்கப்படாத இடங்களில் சூட்டிங் நடத்தியது, வனப்பகுதியில் கியாஸ் சிலிண்டர் வைத்து சமைத்தது உள்ளிட்டவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதன்மை உதவி வன பாதுகாவலர் தெபாஸீஸ்ஜனா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அனுமதியின்றி படப்பிடிப்பு நடைபெற்றது குறித்து விசாரித்தனர். ஊட்டியை போல் கோடை காலங்களில் கொடைக்கானலிலும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க கூடாது என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாண்டிக்குடி அருகே கடந்த 2 வாரங்களாக சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
    • போக்குவரத்துக்கு இடையூறாக சூட்டிங் வாகனங்களை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    பெரும்பாறை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தொடர்விடுமுறை காரணமாக தற்போது அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானல் மட்டுமின்றி மேல்மலை கிராமங்கள் மற்றும் கீழ்மலை கிராமங்களிலும் அவர்கள் சென்று பல்வேறுசுற்றுலா இடங்களை பார்வையிட்டு வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் சுற்றுலா விடுதிகள் நிரம்பி வழிகின்றன.

    முக்கிய சாலைகள் அனைத்தும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாண்டிக்குடி அருகே கடந்த 2 வாரங்களாக சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வத்தலக்குண்டு-தாண்டிக்குடி சாலையில் சூட்டிங் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மலை சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே இந்த சாலையில் ஒருபுறம் வாகனம் வந்தால் எதிர்திசையில் வரும் வாகனங்கள் மிகுந்த சிரமத்துடனே கடந்து செல்லும் நிலை உள்ளது. இதுபோன்ற நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சூட்டிங் வாகனங்களை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    அனுமதிபெற்று நடக்கிறதா அல்லது அனுமதி இல்லாமல் நடக்கிறதா என்றும் தெரியவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சூட்டிங் நடத்தவேண்டும் என்றுதான் அதிகாரிகள் அனுமதி அளிப்பார்கள். ஆனால் இப்பகுதியில் நடத்தப்படும் படப்பிடிப்பால் உள்ளூர் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    பள்ளிகள் தொடங்கிய பிறகு மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். எனவே உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×