என் மலர்

    நீங்கள் தேடியது "Cinema News"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இப்படத்தின் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்
    • இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.

    கடந்த ஆண்டு வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து இருந்தார் விஜய் சேதுபதி. ஜனவரி மாதம் விஜய் சேதுபதியும் கட்ரீனா கைஃப் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து இருந்தனர். இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    அதைத்தொடர்ந்து விடுதலை 2, மஹாராஜா படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் விஜய் சேதுபதியின் 51 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்தின் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். படத்திற்கு ஏஸ் என்ற தலைப்பை வைத்துள்ளனர். விஜய் சேதுபதி ஒரு கையில் பகடையை உருட்டுவது போலவும் மறுக் கையில் சுருட்டை பிடித்தபடி போஸ்டர் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".
    • இப்படத்தை T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

    அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் கடந்த மாதம் வெளியானது. T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

    வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

    ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன். ஒரு பிளே பாய் கதாப்பாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார்.

    அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை.
    • எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விடுதலை -1 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

    எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் நடைபெற்று வந்தது. விடுதலை பாகம் 1 சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றது.

    விடுதலை பாகம் 2 சில காட்சிகள் படமாக்க பட்ட நிலையில், விஜய் சேதுபதியை வைத்து இன்னும் 20 நாட்கள் எடுக்க வேண்டிய காட்சிகள் உள்ளது. விஜய் சேதுபதி பல்வேறு படங்கள் பல்வேறு மொழியில் நடித்து வருவதால் அவரால் 20 நாட்கள் கால் ஷீட் கொடுக்க இயலவில்லை. அதனால் படப்பிடிப்புகள் தாமதம் ஆகின்றன என தகவல் வெளியாகிய நிலையில் தற்பொழுது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

     

    இந்நிலையில் படத்தை குறித்து மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கவுள்ளார். இது குறித்து விடுதலை 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகிய புகைப்படம் அதை உறுதி படுத்தியுள்ளது. எஸ்.ஜே சூர்யா எம்மாதிரி கதாப்பாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த வருடம் விஜய் சேதுபதியின் 51 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
    • இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து இருந்தார் விஜய் சேதுபதி. ஜனவரி மாதம் விஜய் சேதுபதியும் கட்ரீனா கைஃப் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து இருந்தனர். இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    அதைத்தொடர்ந்து விடுதலை 2, மஹாராஜா படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் விஜய் சேதுபதியின் 51 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்தின் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஆறுமுககுமார் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் யோகி பாபு நடிக்க ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 6.30 மணியளவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார்.
    • இப்படத்தை இ4 எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

    மலையாள திரைப்படமான ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பகத்தின் நடிப்பால் வெற்றிப்படமானது. பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனைச் (பகத்) சந்திக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

    இந்தப் படம் முதல் 5 நாள்களில் ரூ. 50 கோடியைக் கடந்து சாதனை படைத்த நிலையில், சமீபத்தில் உலகளவில் ரூ.100 கோடியை தாண்டியது. தற்போது ரூ.150 கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், பகத் பாசில் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை இ4 எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்து எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இப்படத்தின் கதையை சாந்தி மாயதேவி எழுதியுள்ளார். இவர் இதற்கு முன் திரிஷ்யம் 2 படத்திலும் விஜய் நடிப்ப்ல் வெளிவந்த லியோ திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பகத் பாசில் ஜீது ஜோசப்புடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவே. திரிஷியம் பட இயக்குனர் பகத் பாசலை வைத்து எம்மாதிரி கதைக்களத்துடன் படத்தை இயக்க போகிறார் என ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
    • இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

    நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

    இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சூர்யா 44 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். அல்லு அர்ஜூன் நடித்த அல வைகுண்டபுரமுலோ படத்தின் மூலம் பிரபலமானார் பூஜா ஹெக்டே. அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் 40 நாட்கள் நடைப்பெறவுள்ளது. அதற்கு அடுத்து ஊட்டியில் நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இத்திரைப்படம் சுற்று சூழல் பாதிப்பை பற்றி பேசக்கூடிய திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     

    மேலும், இப்படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இவர் முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்திருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சர்ச்சைக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத பிரபல பாலிவுட் நடிகை.
    • பாலிவுட்டில் பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக பங்கேற்றார்.

    1997-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அக்னிசக்ரா படத்தின் மூலம் அறிமுகமானார் ராக்கி சவந்த். சுடாலி நம்பர் 1, குருக்ஷேத்ரா, 6 டீன்ஸ், தம், சரத்குமார் நடித்த கம்பீரம், பைசா வசூல், ஏக் கஹானி ஜூலி கி உள்ளிட்ட பல படங்கள் மூலம் பிரபலமானார்.

    பாலிவுட்டில் பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர் பிக்பாஸ் 14-வது சீசனிலும் இவர் போட்டியாளராக பங்கேற்றார்.

    சர்ச்சைக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சவந்த். 45 வயதாகும் இவர் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி பாலிவுட்டையே கதிகலங்க வைத்தவர்.

    மிகவும் மோசமான உடைகளை அணிவது, பலருடன் நெருக்கம் என அவர் போடாத ஆட்டமே கிடையாது. முதல் கணவரான ரித்தேஷ் சிங்கை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2022-ம் ஆண்டு கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கானுடனும் ராக்கி சாவந்த் பிரச்சனை செய்து சண்டை போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ராக்கி சவந்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு நேற்று முன் தினம் இரவு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ராக்கி சவந்தை அவரது முன்னாள் கணவர் தான் மருத்துவமனையில் கொண்டு சேர்த்திருக்கிறார்.

     இதனைத்தொடர்ந்து அவருக்கு கருப்பையில் டியூமர் இருப்பதாகவும், கருப்பை புற்றுநோய் இருப்பதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அதுதொடர்பான பரிசோதனைகளையும் மேற்கொள்ளப் போவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவரது முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
    • தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

    ஜி.வி. பிரகாஷ் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசையமைத்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர், ஜெயில், செல்பி, அடியே படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தன.

    ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி இருவருமே பள்ளி பருவத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

    தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்த 13-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில், யூடியூப் வீடியோக்கள் குறித்து பாடகி சைந்தவி வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

    யூடியூப் சேனல்களில் தங்களுடைய விவாகரத்து குறித்து முனையப்படும் கதைகள் பார்ப்பதற்கு வருத்தம் அளிக்கிறது. தங்களுடைய முடிவுக்கு மதிப்பளிக்க கோரி வேண்டுகோள் வைத்த பிறகும் இதுபோன்று கதைகள் பின்னப்படுவது வேதனையாக உள்ளது. ஒருவரின் குணாதிசயத்தை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சிதைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முடிவு எங்கள் இருவரின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டது. நானும் ஜி.வி பிரகாஷ் குமாரும் பள்ளிப் பருவம் முதலில் நண்பர்களாக இருந்துள்ளோம். 24 வருட நட்பு. அதே நட்புடன் பயணிப்போம் என்று சைந்தவி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஜிவி பிரகாஷ்  இந்த கஷ்டக்காலத்தில் என்னுடன் பயணிக்கும் நபர்களுக்கும், நண்பர்களுக்கும் என் முன்னாள் மனைவி சைந்தவிக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உல்லு ஓடிடி தளத்தை 2018 ஆம் ஆண்டு விபு அகர்வால் தொடங்கினார்.
    • நிபு அகர்வால் தற்பொழுது அடுத்ததாக 'ஹரி ஓம்' என்ற ஓடிடி தளத்தை தொடங்கியுள்ளார்.

    உல்லு ஓடிடி தளத்தை 2018 ஆம் ஆண்டு விபு அகர்வால் தொடங்கினார். பிரதியேகமான அடல்ட் தொடர்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் ஓடிடி தளமாக இது நிலவி வருகிறது.

    நிபு அகர்வால் தற்பொழுது அடுத்ததாக 'ஹரி ஓம்' என்ற ஓடிடி தளத்தை தொடங்கியுள்ளார். இது இதிகாச கதைகளும், புராண கதைகளும் , இந்திய வரலாரும் இதில் ஒளிப்பரப்ப போவதாக கூறியுள்ளார். இந்த ஓடிடி தளத்தில் வெறும் U ரேடட் கண்டண்டுகளை மட்டுமே ஒளிப்பரப்ப போவதாகவும் இது உல்லு தளத்திலிருந்து முற்றிலும் மாறுப்பட்டவை என கூறியுள்ளார்.

    ஹரி ஓம் இந்திய பாரம்பரியம் மற்றும் மத உள்ளடக்கத்தை அனுபவிப்பதற்கான ஒரு இடமாகும், மேலும் இது போன்ற கருப்பொருள்கள் மீது இளைய பார்வையாளர்களிடையே உலகளாவிய ஆர்வத்தை அதிகரிக்கும், இது இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் கதைகளை ஆராயும் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ஹரி ஓம் தளம் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். முதற்கட்டமாக 20 புராண நிகழ்ச்சியை வைத்து தொடங்க போகிறார்கள். குழந்தைகளுக்கு அனிமேஷன் வடிவில் புராண நிகழ்ச்சிகள் இடம் பெறும் என தெரிவித்துள்ளனர்.

    உல்லு போன்ற அடல்ட் வீடியோக்களை தயாரிக்கும் அதே நிறுவனம் இப்படி ஒரு ஆன்மீக தளத்தை தொடங்குவது மகக்ளிடையே அதிர்ச்சியையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. இதனால் நெட்டிசன்கள் உல்லு நிறுவனத்தை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தை பகிர்ந்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'வேட்டையன்' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது.
    • இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    'ஜெயிலர்' படத்திற்கு பிறகு ஞானவேல் இயக்கிவரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்தார். அவரது 170-வது படமான இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

    'வேட்டையன்' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினிகாந்திற்கான காட்சிகள் முழுவதும் முடிவடைந்தது என படக்குழுவினர் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.

    இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தில் நடிக்க உள்ளார். அதன் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்லும் விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். ஒருவாரம் அபுதாபியில் தங்கி இருந்து ஓய்வு எடுக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்தை கண்டதும் ரசிகர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2006 ஆம் ஆண்டு வெளியான தேவதாசி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார் ராம் பொதினேனி
    • இந்நிலையில், நடிகர் ராமின் பிறந்தநாளை முன்னிட்டு 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    2006 ஆம் ஆண்டு வெளியான தேவதாசி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார் ராம் பொதினேனி. அதைத்தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு ரெடி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் சீக்குவலான 'டபுள் ஐஸ்மார்ட் ' படத்திற்காக நடிகர் ராம் பொதினேனி மற்றும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது திரைப்பெயரை உஸ்தாத் ராம் பொதினேனி மாற்றிக்கொண்டார்.

    இப்படத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி ஹீரோவாகவும், சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரிக்க, பான் இந்தியா படமாக உருவாகுகிறது. இதற்கு இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

    இந்நிலையில், நடிகர் ராமின் பிறந்தநாளான நேற்று (மே 15) 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலியின் காட்சியமைப்புகள் அருமையாக வந்துள்ளது. 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. மேலும், படம் குறித்தான அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • இயக்குனரான இளன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு கவிதையை எகஸ் தளத்தில் வெளியிட்டார்.

    'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. இப்படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி சில நாட்களே ஆன நிலையில் பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

    ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்த ஒருவன் சினிமாவில் நடிகனாக ஆசைப்படுகிறான். அவன் படும் கஷ்டங்கள், போராட்டத்தை பற்றி பேசக் கூடிய படமாக இது அமைந்துள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் பாசிடிவ் விமர்சனத்தை முன்வைத்து வருகின்ரனர். சில நாட்களுக்கு முன் படத்தின் இயக்குனரான இளன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு கவிதையை எகஸ் தளத்தில் வெளியிட்டார்.

    அதைத்தொடர்ந்து படத்தின் பாடலான "முதல் மழை" வீடியோ பாடல் யுடியூபில் வெளியாகியுள்ளது. அதிதி போஹங்கரை கவின் திருமணம் செய்யும் காட்சிகள் இப்பாடலில் அமைந்துள்ளது. பாடலின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்ட வருகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×