என் மலர்

    உலகம்

    பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
    X

    பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீதிபதி கார் டிரைவரை அக்கும்பல் ஒன்றும் செய்யவில்லை.
    • கடத்தப்பட்ட நீதிபதியை பாதுகாப்பாக மீட்க மாகாண முதல்வர் கந்தாபூர் உத்தரவுகளை பிறப்பித்தார்.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் ஷகிருல்லா மர்வாட். இவர் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆயுதங்களுடன் வந்த கும்பல் காரை வழிமறித்து நீதிபதியை கடத்தி சென்றது. ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள டேரா இஸ்மாயில் கான் மாவட்டம் பக்வால் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்தது. நீதிபதி கார் டிரைவரை அக்கும்பல் ஒன்றும் செய்யவில்லை. நீதிபதி கடத்தப்பட்டதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், கடத்தப்பட்ட நீதிபதியை பாதுகாப்பாக மீட்க மாகாண முதல்வர் கந்தாபூர் உத்தரவுகளை பிறப்பித்தார். மார்வாட்டின் மீட்புக்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×