என் மலர்

    தமிழ்நாடு

    சிவகாசியில் பட்டாசு ஆலையில் எந்திரம் வெடித்து பயங்கர விபத்து: பெண் படுகாயம்
    X

    தீயணைப்பு வீரர்கள் கட்டிட இடிபாடுகளை அகற்றிய காட்சி.

    சிவகாசியில் பட்டாசு ஆலையில் எந்திரம் வெடித்து பயங்கர விபத்து: பெண் படுகாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொழிலாளர்கள் அங்கு இருந்த ஹீட்டர் மிஷினை சுவிட்ச் ஆப் செய்யாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
    • தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷனல் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது47). இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சந்தன மகாலிங்கம் என்பவர் பட்டாசு தயாரிக்க தேவையான அட்டைக் குழாய்களுக்கு யூ.வி. கோட்டிங் செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகின்றார். இங்கு வழக்கம் போல் நேற்று இரவில் வேலை நடைபெற்றது.

    அப்போது தொழிலாளர்கள் அங்கு இருந்த ஹீட்டர் மிஷினை சுவிட்ச் ஆப் செய்யாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் அந்த தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இடர்பாடுகளில் வேறு யாரும் சிக்கி இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தனர்.

    இந்த சம்பவத்தின்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராணி (35) என்கிற பெண்ணிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    Next Story
    ×