என் மலர்

    தமிழ்நாடு

    நான் பேசத் தேவையில்லை கிளம்பட்டுமா?: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    X

    நான் பேசத் தேவையில்லை கிளம்பட்டுமா?: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமைச்சர் காந்தி வாகனத்தில் ஏறி நிற்க கூடியிருந்த ஒரு பகுதியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
    • அங்கு கூடி இருந்தவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் நான் பேசத் தேவையில்லை இல்லையா? அமைச்சரை பார்த்து விட்டீர்கள் அல்லவா, நான் கிளம்பட்டுமா, என்று கேட்டு ஷாக் கொடுத்தார்.

    அரக்கோணம்:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசாரம் செய்தார்.

    முன்னதாக கட்சியினர் உதயநிதி ஸ்டாலினுக்கு வீரவாள் வழங்கினர். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு வெள்ளி வீரவாளை அசைத்துக்காட்ட அங்கிருந்த தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கினார்.

    அப்போது உதயநிதி ஸ்டாலின் பிரசார வாகனத்தில் அமைச்சர் காந்தி ஏற முற்பட்டார்.

    இதனால் பேச்சை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின் அவர் வாகன த்தில் ஏறி நிற்கும் வரை காத்திருந்தார்.

    தொடர்ந்து அமைச்சர் காந்தி வாகனத்தில் ஏறி நிற்க கூடியிருந்த ஒரு பகுதியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    அப்பொழுது அங்கு கூடி இருந்தவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் நான் பேசத் தேவையில்லை இல்லையா? அமைச்சரை பார்த்து விட்டீர்கள் அல்லவா, நான் கிளம்பட்டுமா, என்று கேட்டு ஷாக் கொடுத்தார். அங்கு கூடி இருந்த பெண்கள் உட்பட அனைவரும் வேண்டாம் நீங்கள் பேசுங்கள் என கூறினர். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தன் பேச்சை தொடர்ந்தார்.

    இதனால் கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×