என் மலர்

    தமிழ்நாடு

    ராமநாதபுரம், காரைக்குடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்
    X

    ராமநாதபுரம், காரைக்குடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சூரக்குடி அரசு மருத்துவமனை செல்லும் சாலை வழியாக பரப்புரை நடைபெறும் திடலுக்கு வருமாறு வேண்டுகிறேன்.
    • மாவட்ட பாசறை செயலாளர் பிரபு உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    காரைக்குடி:

    தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகிறது. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற் கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்.

    அந்த வகையில், இன்று மாலை 4 மணியளவில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாளை ஆதரித்து பிரசாரம் மேற் கொள்கிறார்.

    இதையடுத்து மாலை 7 மணியளவில் காரைக்குடி ஹவுசிங் போர்டு வி.ஏ.ஓ. காலனி திடலில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அ.சேவியர்தாஸை ஆதரித்து தேர்தல் பரப்புரையாற்றுகிறார்.

    இதுகுறித்து மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக காரைக்குடிக்கு கழக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு மாலை 7 மணியளவில் வருகை தருகிறார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கழக அமைப்புச்செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர், அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார்,


    சிவகங்கை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள், கழக அமைப்புச் செயலாளர் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், முன்னாள் அமைச்சர், எம்.ராதாகிருஷ்ணன், சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

    திடலில் பிரம்மாண்டமாக மேடை அமைத்துள்ளோம். இதில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், ஆலங்குடி. திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழக மாநில நிர்வாகிகள், முன்னாள் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வார்டு மற்றும் கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., மருது சேனை, மனிதநேய ஜனநாயக கட்சி, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம், லெனின் கம்யூனிஸ்ட் இன்னும் ஏனைய கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

    சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், ஆலங்குடி, திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதியிலிருந்தும் தேவகோட்டை பகுதியிலிருந்தும் வருபவர்கள் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி வழியாக வந்து கழனி வாசல், சூரக்குடி அரசு மருத்துவமனை செல்லும் சாலை வழியாக பரப்புரை நடைபெறும் திடலுக்கு வருமாறு வேண்டுகிறேன்.

    மேலும் வாகனங்களை அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்துமாறும், காவல்துறைக்கு முழு ஒத்துழுழைப்பு தருமாறும், பொதுமக்கள் இக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்றார். அப்போது வேட்பாளர் சேவியர்தாஸ், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×