அருண் காஸ்ட்ரோ நிக்டோபோபியா என்னும் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டவர். அதாவது இருளில் அவரால் இருக்க முடியாது. மனைவியை இழந்த சோகத்தில் போலீஸ் பணியில் இருந்து விலகி தடயவியல் துறையில் வகுப்பு எடுத்து வருகிறார். ஒரு பெண் கழுத்தில் குத்தப்பட்டு கொலையான வழக்கில் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் காவல்துறை தவிக்கிறது.
புத்திசாலித்தனமான விசாரணை அதிகாரியான அருணை திரும்ப அழைக்கிறார்கள். சந்தேகத்தின் பேரில் உள்ளவர்களின் உடல்மொழி, அசைவு என உளவியல் ரீதியாக நுன்னியமாக கவனிக்கும் அருணின் சந்தேக பார்வை பலர்மீது படர இறுதியில் உண்மையான குற்றவாளியை யார் என்பதை அருண் எப்படி கண்டுபிடித்தார் என்பதே படத்தின் கதை.
விசாரணை அதிகாரி கதாபாத்திரத்துக்கு ராம் அருண் காஸ்ட்ரோ கச்சிதமாக பொருந்துகிறார். உளவியல் ரீதியாக விசாரணை செய்யும்போது அவரது நடிப்பில் பக்குவம் தெரிகிறது. முதல் படத்திலேயே இயல்பாக நடித்து படத்தை சுவாரசியமாக்குகிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது. அருணின் புலனாய்வுக்கு மட்டுமல்லாது படத்தின் நகர்வுக்கும் விஷ்ணுபிரியா பக்கபலமாக இருக்கிறார். ஆக்ஷன், துரத்தல் காட்சிகளிலும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
மற்ற பாத்திரங்களான காயத்ரி, லிஜீஷ், மைம் கோபி, லிங்கா என அனைவருமே தங்களது நேர்த்தியான நடிப்பால் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். படம் தொடங்கியது முதல் முடிவது வரை ஒரு துப்பறியும் நாவலை படித்த அனுபவம் ஏற்படுகிறது. ஒரு சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம். அது படத்தின் வேகத்துக்கு தடையாக அமைகின்றன. இடைவேளைக்கு முந்தைய காட்சியில் காலையில் துரத்த தொடங்கியது இரவு வரை நீடிப்பது மட்டும் லாஜிக் குறையாக தெரிகிறது.
டிஎஸ்.கிருஷ்ணகுமாரின் ஒளிப்பதிவில் குற்றங்களின் இருளும் விசாரணையின் வெளிச்சமும் நம்மை ஆட்கொள்கிறது. ரோனி ரெபெலின் பின்னணி இசை படத்துக்கு வேகம் கொடுக்கிறது. சிஎஸ்.பிரேம் குமாரின் படத்தொகுப்பு விசாரணையை கண்முன் கொண்டு வருகிறது.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.