நாயகன் மணிகண்டன் வேலைக்கு ஏதுவும் செல்லாமல் குடித்துவிட்டு ஊதாறித்தனமாக ஊர் சுற்றி வருகிறார். ஊருக்குள் எந்த பிரச்சனை என்றாலும், மணிகண்டன் தான் காரணம் என்னும் அளவுக்கு ஊரில் நல்ல பெயரை சம்பாதித்திருக்கிறார். அவருக்கு திருமணம் செய்து வைத்தால் பிரச்சனைகளுக்கு போக மாட்டார் என்று மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர்.
இவரது முன்கோபம் மற்றும் அடிக்கடி பிரச்சனைகளுக்கு போவதால் உள்ளூரில் அவருக்கு பெண்கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து மணிகண்டன் வீட்டிற்கு பக்கத்தில் குடியிருக்கும் பெண் ஒருவரின் சொந்தக்கார பெண்ணான நாயகி ரஃபியாஜாபரை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்கிறார்கள். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது.
ரஃபியாஜாபருக்கு இரு அண்ணன்கள். சொத்து தகராறில் தனது அப்பாவை கொலை செய்த சித்தப்பாவை வெட்டிவிட்டு இருவரும் ஜெயிலுக்கு செல்கிறார்கள்.
இதற்கிடையே திருமணத்துக்காக காத்திருக்கும் இருவரும் மனதில் ஆசையை வளர்த்து காதலிக்க தொடங்குகின்றனர். ஆனால் திருமணம் நெருங்கும் வேளையில் மணிகண்டன் குணம் பற்றி பெண் வீட்டாருக்கு தெரியவர திருமணம் நிறுத்தப்படுகிறது. தடைபட்ட திருமணம் நடந்ததா? மணிகண்டனின் முன்கோப குணம் அவருக்கு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது? என்பதே படத்தின் மீதிக்கதை.
தமிழ் சினிமாவில் பார்த்து பழகிய கதைதான் என்றாலும், இயக்குனர் நாகராஜ் சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாக எடுத்திருப்பதால் வித்தியாசம் தெரிகிறது. கிராமத்து மனிதர்களை மேக்கப் இல்லாமல் இயல்பாகவே படம் பிடித்து அசத்தி இருக்கிறார். திரைக்கதையும் எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தாமல் விறுவிறுப்பாக செல்கிறது.
கதாநாயகன், கதாநாயகி என்று பிரிக்காமல் அனைவருமே சிற்ப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தில் ரசிக்கும்படியான மூன்று பாடல்கள் இருக்கின்றன.
டி.மகேஷின் ஒளிப்பதிவு, அனந்த லிங்ககுமாரின் படத்தொகுப்பு படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்றபடியாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `வன்முறைப்பகுதி' செல்லவேண்டிய இடம்தான். #VanmuraiPaguthiReview #Manikandan
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.