அதேநேரத்தில் காதலியின் நினைவிலேயே இருக்கும் அண்ணாதுரை, வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். ஆனால் அண்ணாதுரை மீது ஜுவல் மேரிக்கு, காதல் வருகிறது. ஆனால் அவளது காதலை ஏற்க மறுக்கிறார் அண்ணாதுரை.

மறுபுறத்தில் தம்பிதுரையாக வரும் மற்றொரு விஜய் ஆண்டனி அமைதியானவராக தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். பி.டி மாஸ்டராக இருக்கும் அவருக்கு, டயானா சாம்பிகாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், திருந்தி வாழ முடிவு செய்யும் அண்ணாதுரை, ஜுவல் மேரியை திருமணம் செய்து கொள்ளவும் சம்மதிக்கிறார்.
அதற்கு முன்னதாக தனது குடிப்பழக்கத்தை விட முடிவு செய்து, பாருக்கு செல்கிறார். அங்கு நடக்கும் எதிர்பாராத விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழக்கிறார். அதற்கு பொறப்பேற்றுக் கொண்டு அண்ணாதுரை சிறைக்கு செல்கிறார். பின்னர் 7 வருடங்களுக்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளியே வரும் அண்ணாதுரை, சிறை வாசலில் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்படுவதை பார்க்கிறார். அதிலும் அந்த கொலையை தம்பிதுரை செய்வதை பார்க்கும் அண்ணாதுரை அதிர்ச்சி அடைகிறார்.

அண்ணாதுரை ஜெயிலில் இருந்த 7 ஆண்டுகளில் நடந்தது என்ன? அமைதியான இருக்கும் தம்பிதுரை கொலைகாரனாக மாறியது எப்படி? அவனது வாழ்க்கையில் என்ன நடந்தது? அண்ணாதுரை ஜுவல் மேரியுடன் சேர்ந்தாரா? தம்பிதுரை டயானா சாம்பிகாவை கரம்பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
அண்ணன், தம்பி என முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி வழக்கம் போல தனது எதார்த்த நடிப்பால் ரசிக்க வைக்கிறார். ரவுடி, பொறுமையானவன், காதலன், மகன் என பல்வேறு கோணங்களில் அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. இரண்டு வேடங்களிலும் நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார். அதுபோல், விஜய் ஆண்டனியின் படத்தொகுப்பும் சிறப்பாகவே உள்ளது. முதல் படம் போல இல்லாமல் தேர்ச்சி பெற்றவராக எடிட்டிங்கிலும் விஜய் ஆண்டனி கலக்கி இருக்கிறார்.

டயானா சாம்பிகாவுக்கு இது முதல் படம் என்றாலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஜுவல் மேரி ரசிகர்களை கவரும்படியாக நடித்திருக்கிறார். அவரது முகபாவணையும், பேச்சும் அல்வா சாப்பிடுவது போல இருக்கிறது. காளி வெங்கட் காமெடியில் கலக்கியிருக்கிறார். ராதாரவி, நளினி காந்த், மொட்டை ராஜாகுமார், ரிந்து ரவி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். டயானா சாம்பிகாவின் அப்பாவாக வரும் செந்திலின் நடிப்பும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த செந்தில், இப்படம் முழுவதுமே வலம் வந்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
வழக்கம் போல வரும் அண்ணன், தம்பி கதை போல இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கி இருக்கும் இயக்குநர் ஜி.ஸ்ரீனிசானுக்கு பாராட்டுக்கள். முதல் பாதி அண்ணாதுரையை மையப்படுத்தியே சென்றாலும், இரண்டாவது பாதியில் முற்றிலும் மாறுபட்டு தம்பிதுரையை மையப்படுத்தி உருவாக்கி இருப்பது புதுமையாக ரசிக்கும்படி இருக்கிறது.

விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. கே.தில்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `அண்ணாதுரை' இரட்டைவிருந்து.
மேலும் விமர்சனம் செய்திகள்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்
- தன் குடும்பத்தை காக்க போராடும் மோகன்லால் - திரிஷ்யம் 2 விமர்சனம்
- பாசத்திற்காக ஏங்கும் நாயகன் - செம திமிரு விமர்சனம்
- விஷாலின் ஆக்ஷன் விருந்து - சக்ரா விமர்சனம்