இதுபோன்ற தவறான வழிகளில் சம்பாதிக்க வேண்டாம் என்று ஹேமலதா பலமுறை கூறியும் ராஜியா வசூல் வேட்டையை நிறுத்தவில்லை. ராஜியா தனது மனைவி, மகன் மீது மிகுந்த பாசம் கொண்டிருப்பதால் ஹேமலதா அதனை பொறுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இதுஒருபுறம் இருக்க காவல்துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரியை தனது கையில் போட்டுக் கொள்ளும் பெண் ஒருவர், அந்த அதிகாரியின் பெயரை சொல்லி சில இடங்களில் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார். இந்நிலையில், போக்குவரத்தை தனது ஸ்டைலில் நடனமாடி சரிசெய்யும் ராஜியாவை பார்க்கும் அந்த பெண்ணுக்கு அவரை பிடித்து போக இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது.
இந்நிலையில், அந்த வழியாக செல்லும் ஒரு இளைஞனை மடக்கிப் பிடிக்கும் ராஜியா அவனிடம் காசை கறக்க நினைத்து வண்டிக்குரிய ஆவணங்களை சமர்பிக்க கூற, தனது அப்பா மருத்துவமனையில் உயிருக்கு போராடுவதாகவும், அவரை காப்பாற்ற மருந்து வாங்க அவசரமாக வந்ததால் ஆவணங்களை எடுத்துவரவில்லை என்று கூறுகிறார். அவனது பேச்சை கேட்காமல் அந்த இளைஞனை அனுப்ப மறுப்பதால், அந்த இளைஞனின் தந்தை இறந்துவிடுகிறார்.

இதையடுத்து ராஜியாவை தான் பழிவாங்கியே தீருவேன் என்று அந்த இளைஞன் கூறி செல்கிறார். இந்நிலையில், ராஜியா பணிநீக்கம் செய்யப்படுவதாக அவரது வீட்டுக்கு தபால் வர, இதுகுறித்து ஹேமலதா, ராஜியாவிடம் கூறும் போது அவரது போன் உடைந்து விடுகிறது. இதனால் மனவேதனையில் மது அருந்தும் ராஜியாவின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிடுகிறான்.
மகனை இழந்த துக்கத்தில், ராஜியாவால் தான் தனது மகன் இறந்ததாகக் கூறி ஹேமலதா கணவனை விட்டுப் பிரிகிறாள். மகனையும் இழந்து, மனைவியையும் பிரிந்த துக்கத்தில் தனது தவறை ராஜியா உணர்ந்தாரா? மீண்டும் மனைவியுடன் இணைந்தாரா? அனைவரையும் ஏமாற்றிய அந்த பெண் ராஜியாவையும் ஏமாற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
ராஜியா கிருஷ்ணா ஒரு போலீஸ் அதிகாரியாக காட்சிக்கு தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக அவர் செய்யும் காமெடியும் ரசிக்கும் படி இருக்கிறது. ஹேமலதா ஒரு குடும்பபாங்கான பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி ஸ்ரீவாசன், கோவை பானு, சண்முக வேலு கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
படத்தை இயக்கி தானே நடித்திருக்கும் ராஜியா கிருஷ்ணா, தனது பதவியின் மூலம் மற்றவர்களை மிரட்டி பணம் பறிக்கக் கூடாது. இதனால் மற்றவற்கள் பாதிக்கப்படுவது போல, அவர்கள் படும் வேதனைகள் தனது குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை சொல்ல முயற்சித்திருக்கிறார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழியை நினைவுபடுத்தும்படி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். நேர்மையான வழியில் வாழ்வதே நல்லது என்பதை படத்தின் மூலம் தெரியப்படுத்துகிறார்.
வி.கே.கண்ணன் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். வேதாசெல்வம் ஒளிப்பதிவில் பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல் காட்சிகள் பார்க்கும்படி கொடுத்திருப்பது சிறப்பு.
மொத்தத்தில் `அட்ரா ராஜா அடிடா' அதிகாரம்.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்