இந்நிலையில், அந்த ஊரில் முக்கிய ரவுடியாக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் அந்த ஊரில் பல அட்டகாசங்களை செய்து வருகிறார். அதில் ஒன்றாக அடுத்தவர்களின் சொத்துக்களை, தனது ஆள் பலத்தைக் கொண்டு தனது பெயருக்கு மாற்றிக் கொள்வது உள்ளிட்ட அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் தமனுக்கு வேண்டிய முதியவர் ஒருவரை மிரட்டி, அவரது வீட்டை எழுதி வாங்கி விடுகிறார்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்படும் தமன், இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கிறார். அதன்பேரில் போலீசார் மனோகரை கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர். இதையடுத்து ஜாமீன் பெற்று வெளியே வரும் மனோகர், தன்னை போலீசில் சிக்க வைத்த தமனை பழிவாங்க முடிவு செய்கிறார். மேலும் தனது ஆட்களின் மூலம் தமனை சரமாரியாக அடித்து விடுகிறார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமனை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.
இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் தமன், அனைவரிடமும் தனக்கு விபத்து ஏற்பட்டதாகவே கூறுகிறார். தனது நண்பர்களிடம் மட்டும் உண்மையை கூற, தமனின் நண்பர்கள் மனோகரை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். திட்டம் போட்டு தான் மனோகரை பழிவாங்க வேண்டும் என்று தமன் அவரது நண்பர்களை தடுக்கிறார். அதற்காக மனோகரிடம் இருக்கும் ஆள் பலத்தை முதலில் குறைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் தமன், மனோகரை பழிவாங்க தனது நண்பர்களுடன் இணைந்து புயலாக கிளம்புகிறார். அவரது முயற்சியில் வெற்றி கண்டாரா? மனோகரை திட்டம் போட்டு பழிவாங்கினாரா? தனது காதலியுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் தமன் குமார் படத்தின் தலைப்புக்கு ஏற்ப ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், ரொமேன்ஸ் காட்சிகளிலும் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. நாயகி மதுஸ்ரீ அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். நடிப்பிலும், பாடல் காட்சிகளிலும் அவரது நடிப்பு ரசித்து பார்க்கும்படி இருக்கிறது.

மனோகர் ஒரு ஆக்ரோஷமான உள்ளூர் ரவுடியாக சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் அவர் மிகையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது போல தோன்றுகிறது. காமெடிக்கு நடிகர் சிங்கம்புலி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். கும்பி அஸ்வின் உள்ளிட்ட அவரது நண்பர்கள் இணையும் நேரம் கலகலப்பு உண்டாகிறது. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே படத்தின் போக்கிற்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.
ரவுடி ஒருவர் செய்யும் அட்டகாசங்களை, நாயகன் தனது நண்பர்களுடன் இணைந்து முறியடிக்க முயற்சி செய்யும் கதையை நட்பு, காதல், ரொமான்ஸ் என ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார் ஜி.ஆறுமுகம். சண்டைக்காட்சிகளும், குத்துப்பாட்டு ஒன்றும் ரசித்து பார்க்கும்படி இருக்கிறது.
சார்லஸ் தனா இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை ஓரளவுக்கு பரவாயில்லை. வி.விஜய்யின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.
மொத்தத்தில் `புயலா கிளம்பி வர்றோம்' தாங்க முடியவில்லை.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்