அப்படி இவர் கனவில் கொல்லப்படும் ஒவ்வொரு நண்பனும் மறுநாள் காணாமல் போகிறார்கள். இதனால் பயந்துபோன அவர், இதுபற்றி நாயகன் சிவாவிடம் கூறுகிறார். சிவாவும் தனது நண்பனின் கனவில் தோன்றிய இடத்திற்கு சென்று அங்கு ஏதாவது தடயம் இருக்கிறதா? என்று தேடிப் பார்க்கிறார்.
ஆனால், அப்படி அவர்கள் கொலை செய்யப்பட்டதற்காக தடயங்கள் எதுவுமே அந்த இடத்தில் இருப்பதில்லை. உண்மையில் நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
தமிழ் சினிமாவுக்கு வழக்கமான பழிவாங்கும் கதையையே ‘விருகம்’ படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா. இவரே நாயகனாகவும் படத்தில் நடித்திருப்பதால், இவரிடமிருந்து நடிப்பாவது புதிதாக வரும் என்றால் அதுவும் இல்லை. நடிப்பை முகத்தில் கொண்டுவர ரொம்பவுமே சிரமப்பட்டிருக்கிறார். ஆக்ரோஷம், ரொமான்ஸ் என எதுவுமே இவரிடமிருந்து பெரிதாக வெளித் தெரியவில்லை.
நாயகியாக ஜென்னிஸ், ஒரு சில காட்சிகள் வந்தாலும், மனதில் பதிய மறுக்கிறார். நடிப்பிலும் சுமார் ரகம்தான். நண்பர்களாக வருபவர்களும் புதுமுகங்கள் என்பதால் அவர்களிடமிருந்தும் பெரிதாக நடிப்பை எதிர்பார்க்கமுடியவில்லை. இயக்குனர் சிவா, திரில்லர் கதையில் இன்னும் ஏதாவது புதுமையை புகுத்தியிருக்கலாம். அதேபோல், கதாபாத்திரங்களையும், இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு வேலை வாங்கி நடிக்க வைத்திருக்கலாம்.
பிரபுவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் திரில்லிங் பிரதிபலிக்கவில்லை. எஸ்.ஏ.ராஜீன் ஒளிப்பதிவும் பெரிதாக எடுபடவில்லை.
மொத்தத்தில் ‘விருகம்’ வெறுமை.
மேலும் விமர்சனம் செய்திகள்
- ரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்
- ஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்
- பணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்
- நடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்
- தந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்