எந்த பெண்ணை பார்த்தாலும், அந்த பெண்ணை அடையவேண்டும் என்று நினைப்பவர்கள். இந்நிலையில், முத்துராமனுடைய கம்பெனியில் வேலை பார்த்து வருகிறாள் நாயகி அர்ச்சனா சிங், அவளை அடைய வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் முத்துராமன். அதேபோல், அதே கிராமத்தில் இருக்கும் ராஜேந்திரனும், சுவாமிநாதனும் அவளை அடைய துடிக்கின்றனர்.
தாயார் மறைவுக்கு பிறகு தனது தம்பியுடன் தனிமையில் வசித்துவரும் அர்ச்சனா சிங்கை தேடி, ஒருநாள் அவளது அத்தை வருகிறாள். தனது மகன் அர்ச்சனாவை திருமணம் செய்துகொள்ள ஆசையோடு இருப்பதாக அவளிடம் கூறுகிறாள். தனக்கு ரூ.4 லட்சம் கடன் இருப்பதாகவும், ஆளுக்கு பாதிப் பாதி கடனை அடைத்துவிட்டால் இந்த திருமணத்தை நடத்திவிடலாம் என்றும் யோசனை கூறுகிறாள்.
யாருமில்லாமல் அனாதையாக வாழ்வதைவிட, அந்த கடனை அடைத்துவிட்டு மாமனோடு சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுக்கிறாள் அர்ச்சனா சிங். அதன்படி, தனது முதலாளி முத்துராமனிடம் சென்று பணம் கேட்கிறாள். அவரோ, பணம் வேண்டுமென்றால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று அவளிடம் கூறுகிறார். இதனால், கோபமடைந்த அர்ச்சனா, அவரிடமிருந்து பணத்தை வாங்காமல் திரும்பி செல்கிறாள். பள்ளியில் படிக்கும் தனது தம்பியின் தோழர்கள் இவளுக்கு உதவ முன் வருகிறார்கள்.
இறுதியில், கடனுக்கு தேவையான பணத்தை திரட்டி, தனது மாமாவோடு அர்ச்சனா ஜோடி சேர்ந்தாளா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகன் என்று யாரும் கிடையாது. நாயகி அர்ச்சனா சிங் பார்க்க அழகாக இருக்கிறார். படத்தின் கதையே இவரைச் சுற்றித்தான் இருப்பதால், இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து நடித்திருக்கலாம். படத்தில் நாயகன் இல்லாததால் இவருக்கு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. படம் முழுக்க சோகம் வழிந்த முகத்துடனே வருவதால் ரசிக்க முடியவில்லை.
படத்தின் நாயகர்களான மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், முத்துராமன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். முத்துராமன் வழக்கம்போல் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். மொட்டை ராஜேந்திரனும், சுவாமிநாதனும் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறார்கள்.
ஐஸ் வண்டிக்காரராக வரும் கிருஷ்ணமூர்த்தியின் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது. ஆரம்பத்தில் நாயகிக்கு உதவுவதுபோல் வந்து, பிற்பாதியில் அவரே வில்லனாக மாறுவது சிறப்பு. இயக்குனர் கருப்பையா முருகன் ஹீரோவே இல்லாத ஒரு வித்தியாசமான கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தில் சஸ்பென்ஸ் காட்சிகள் இருந்தாலும், அது எளிதாக யூகிக்கக்கூடிய அளவுக்கு இருப்பதால் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடுகிறது. வசனங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.
இமாலயன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். தாஜ்நூர் தன்னுடைய பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மோகனின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம் தான்.
மொத்தத்தில் ‘யானை மேல் குதிரை சவாரி’ சொகுசு இல்லை.
மேலும் விமர்சனம் செய்திகள்
- தன் குடும்பத்தை காக்க போராடும் மோகன்லால் - திரிஷ்யம் 2 விமர்சனம்
- பாசத்திற்காக ஏங்கும் நாயகன் - செம திமிரு விமர்சனம்
- விஷாலின் ஆக்ஷன் விருந்து - சக்ரா விமர்சனம்
- பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் படம் - கமலி பிரம் நடுக்காவேரி விமர்சனம்
- விபத்தில் மரணம் அடைந்தவர்களின் கதை - இது விபத்து பகுதி விமர்சனம்