ஆனால், ஒரு பைத்தியக்காரன் மட்டும் அந்த பாலத்தில் தைரியமாக நடமாடுகிறான். இந்த பாலத்தின் அருகில் பாபி சிம்ஹாவின் வீடு உள்ளது. பாபி சிம்ஹா வெளியூரில் வேலை செய்வதால், அந்த வீட்டில் அவரது மனைவியும் குழந்தையும் வசித்து வருகிறார்கள்.
இதற்கிடையில், இந்த பாலத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடித்து குறும்படம் எடுக்கும் எண்ணத்துடன் சென்னையில் இருந்து கிளம்பி வருகிறார் நாயகன். கல்லூரி மாணவனான இவர், ஒரு நாள் இரவில் அந்த பாலத்தின் அருகில் கேமராக்களை பொருத்திவிட்டு செல்கிறார். மறுநாள் காலை வந்து பார்க்கும் போது, கேமரா உடைந்திந்தது. பைத்தியக்காரன் தான் கேமராவை உடைத்தான் என்று தெரிந்து அவனிடம் விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது.
இறுதியில் அந்த பாலத்தில் மர்மமான முறையில் மனிதர்கள் இறக்க காரணம் என்ன? பைத்தியக்காரன் நாயகனிடம் சொன்னது என்ன? உண்மையில் அங்கு பேய் இருக்கிறதா? பாலத்திற்கும் பாபி சிம்ஹாவிற்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் பாபி சிம்ஹா வில்லனாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பை ஓரளவு ரசிக்க முடிகிறது. நாயகனாக நடித்திருப்பவர் தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். பாபி சிம்ஹா நடிப்பில் இப்படம் நீண்ட காலங்களுக்கு முன்பே உருவாகியிருக்கிறது. ஆனால், தற்போதுதான் வெளிவந்திருக்கிறது.
வழக்கமான கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கேசவன். காட்சிகளை பார்க்கும் போது பல படங்களின் சாயல் தெரிகிறது. காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லாதது படத்திற்கு பின்னடைவு.
ராஜ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பெரிதாக எடுபடவில்லை. ஜெனீஷ் வீரபாண்டியன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் 'மீரா ஜாக்கிரதை' மிரட்டவில்லை.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்