மேலும், கையை அழிப்பதற்குண்டான அதிசய சக்தி பாண்டாக்கள் வசிக்கும் ஒரு ரகசிய கிராமத்தில் இருப்பதையும் அறிந்துகொள்கிறார்கள். இவர்களுக்கு உதவி செய்யும்விதமாக சிறுவயதில் காணாமல் போன பூ-வை தேடி வந்த அவரது அப்பா, அந்த ரகசிய பாண்டா கிராமத்திற்கு பூ-வை மட்டும் அழைத்துச் செல்கிறார்.
இறுதியில், பூ அந்த கிராமத்துக்கு சென்று அதிசய சக்தியை பெற்று, கையை எதிர்கொண்டு உலகத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
குங்பூ பாண்டா வரிசையில் முன்பு வெளிவந்த இரண்டு பாகங்களைப்போலவே இந்த பாகத்தையும் ரொம்பவும் காமெடியாகவும் ஆக்ஷன் நிறைந்தும் சொல்லியிருக்கிறார்கள். பெரிய சக்தியில்லாத பூ-வை ஏன் டிராகன் வாரியராக ஊகுவே மாஸ்டர் ஆக்கினார் என்பதையும் இந்த பாகத்தில் கூறியிருக்கிறார்கள். கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகள் எல்லாம் படத்திற்கு பிரம்மாண்டம் கூட்டியிருக்கின்றன. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமாக இந்த பாகமும் இருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.
மொத்தத்தில் ‘குங்பூ பாண்டா 3’ - குதூகலம்.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்