கோப்ரா படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து 18 மணிநேரம் விக்ரம் சண்டைக்காட்சியில் நடித்ததாக அப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.
அஜய் ஞானமுத்து, விக்ரம்
கோப்ரா படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து 18 மணிநேரம் விக்ரம் சண்டைக்காட்சியில் நடித்ததாக அப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு படக்குழு இந்தியா திரும்பியது. கொரோனா முடிவுக்கு வந்தபின் எஞ்சியுள்ள காட்சிகளை படமாக்க உள்ளனர்.
இந்நிலையில், கோப்ரா படத்தின் நாயகன் விக்ரம் இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி சிறப்பு வீடியோ ஒன்றை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், கோப்ரா படத்திற்காக, விக்ரம் 18 மணிநேரம் தொடர்ந்து சண்டை காட்சியில் நடித்ததாகவும், இதற்கு பின்னரும் வேறு ஒரு சீன் எடுக்க வேண்டும் என சொன்னதற்கு முகம் சுளிக்காமல் விக்ரம் சம்மதம் தெரிவித்ததாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.