நாயகி ஷோபி டர்னருக்கு சிறு வயதில் அதித சக்தி இருக்கிறது. இந்த சக்தி அவரது பெற்றோர் இறக்க காரணமாக அமைகிறது. ஷோபி மியூட்டன்ஸ் இனத்தை சேர்ந்தவர் என்று மியூட்டன்ஸ்களுக்காக பள்ளி நடத்தும் சார்லஸ், அவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வளர்க்கிறார்.
இந்நிலையில், விண்வெளி ஆராய்ச்சிக்கு செல்லும் மனிதர்கள் எதிர்பாராத விதமாக ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இவர்களை காப்பாற்ற நாசா, சார்லஸின் உதவியை நாடுகிறது. விண்வெளியில் உள்ள மனிதர்களை காப்பாற்ற எக்ஸ்-மென் குழுவில் உள்ள சிறந்தவர்களை அனுப்புகிறார்கள்.
அப்போது ஷோபி டர்னரும் எக்ஸ் மென் குழுவில் செல்கிறார். அங்கு சூரிய புயல் ஷோபி தாக்குகிறது. இதிலிருந்து ஷோபிக்கு அளவுகடந்த சக்தி கிடைக்கிறது. இந்த சக்தியை கட்டுப்படுத்த முயலும் போது, மற்றவர்களை காயப்படுத்துகிறாள். மேலும் ஷோபிக்கு இருக்கும் சக்தியை அடைய வேற்று கிரகத்தினர் முயற்சி செய்கிறார்கள்.
இறுதியில் எக்ஸ் மென் குழு, ஷோபியை வேற்று கிரகத்தினரிடம் இருந்து காப்பாற்றினார்களா? ஷோபி என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் மையப்புள்ளியான ஜீன் க்ரேவாக வரும் ஷோபி டர்னர் அசத்தலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவர் கேம் ஆப் த்ரோன்ஸ் சீரியஸில் சன்சாவாக வந்து ரசிகர்களை ஈர்த்தவர். ஷோபியின் ரசிகர்களும் இப்படம் விருந்தாக அமைந்திருக்கிறது.
படம் ஆரம்பம் முதல் இறுதிவரை திரைக்கதை மிக வேகமாக செல்கிறது, சண்டை காட்சிகளில் சுவாரசியங்கள் குறையவில்லை. தெளிவான திரைக்கதை என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் படக்கதை அமைந்திருக்கிறது.
எக்ஸ்-மென் படத்தின் முந்தய பாகங்களை பார்க்காமல் இருக்கும் மக்களுக்கும் இந்த பாகம் தெளிவாக புரியும். இந்த பாகம் முந்தய பாகத்தின் தொடர்ச்சி இல்லை என்பதால், முதல் முறை எக்ஸ்-மென் படத்தை பார்ப்பவர்களுக்கு இந்த பாகம் பிடிக்கும்.
மொத்தத்தில் ‘எக்ஸ்-மென் - டார்க் பீனிக்ஸ்’ எக்ஸலண்ட்.