குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றி வருகிறார் லிண்டா கார்டிலனி. வழக்கமான தனது விசாரணைக்காக அந்த பகுதியில் இருக்கும் பேட்ரிசியா வெலஸ்குவெஸ் வீட்டிற்கு செல்கிறார். பேட்ரிசியாவுக்கு 2 குழந்தைகள். பேட்ரிசியா பாதுகாப்பு அதிகாரிகளிடம் தனது குழந்தைகளை காட்ட மறுக்கிறாள்.
இதையடுத்து குழந்தைகளை பேட்ரிசியா சித்தரவதை செய்வதாக நினைத்து லிண்டா தன்னுடன் வந்த அதிகாரிகள் உதவியுடன் குழந்தைகளை மீட்டு செல்கிறாள். ஆனால் அடுத்த நாளே அந்த குழந்தைகள் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றனர்.
இதுகுறித்து அந்த குழந்தைகளின் அம்மாவான பேட்ரிசியாவிடம் விசாரிக்க, தன் குழந்தைகளை அவள் தான் கொன்றிருப்பாள். அவள் உன் குழந்தைகளையும் கொன்று விடுவாள், இது அவளின் சாபம் என்று லிண்டாவிடம் கூறுகிறார்.
கடைசியில், குழந்தைகளை கொன்று வரும் அந்த அவள் யார்? அவள் ஏன் அவ்வாறு செய்கிறாள்? அவளின் சாபம் என்ன? என்பதே மீதிக்கதை.
குழந்தைகளுக்கான பாதுகாப்பு அதிகாரியாக லிண்டா சிறப்பாக நடித்திருக்கிறார். தனது குழந்தைகள் கடத்தப்படும் போதும், தனது குழந்தைகளை காப்பாற்றும் தருணத்திலும் நல்ல நடிப்பு. பேட்ரிக்கா, ரேமண்ட் குரூஸ் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
தான் இறக்கும் தறுவாயில் சாபம் வாங்கிய ஒரு பெண்ணின் கதையை மையப்படுத்தி இந்த கதையை இயக்கியிருக்கிறார் மைக்கேல் சாவ்ஸ். படம் திகில் காட்சிகளுடன் நகர்வது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
ஜோசப் பிசாராவின் பின்னணி இசையும், மைக்கேல் பர்கீஸின் ஒளிப்பதிவும் திகிலை கூட்டியிருக்கின்றன.
மொத்தத்தில் `அவளின் சாபம்' தொடரும். #AvalinSaabam #AvalinSaabamReview #LindaCardellini #RaymondCruz #PatriciaVelásquez