ஊட்டியில் அண்ணனுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் பாவண்ணன். மிகவும் தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவர், எப்போதும் தூய தமிழில் தான் பேசி வருகிறார். இவருடைய அண்ணன், இவருக்கு பஸ் கண்டெக்டர் வேலை வாங்கித் தருகிறார்.
அங்கேயும் இவர் தமிழில் பேசி வருகிறார். இதனால் பொதுமக்கள் இவரை கேலியாக பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து நாயகி அஞ்சனா ராஜ் ஊட்டி வருகிறார். ஆண்களால், பெண்கள் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பது பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ் தெரியாத அஞ்சனா ராஜ், தமிழ் தெரிந்துக் கொள்ள பாவண்ணனுடன் பழகுகிறார். இருவரும் நட்பாக பழகினாலும், பார்ப்பவர்கள் இவர்கள் காதலர்கள் என்று நினைத்து வருகிறார்கள். நாயகன் எங்கு சென்றாலும் ஜாதி ஒழிப்பு, உள்ளிட்ட பல விஷயங்களில் முற்போக்கு சிந்தனையுடன் இருக்கிறார். இதனால் இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது.
தமிழ் உயிர் மூச்சாக கொண்டிருக்கும் நாயகன், இந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபட்டார்? எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பாவண்ணன், தமிழ் மீது அதிக ஆர்வமும், பற்றும் கொண்டு இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடித்திருக்கிறார். தற்போதுள்ள இளைஞர்கள் தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கும் சூழ்நிலை இருப்பதாகவும், தமிழ் நாட்டில் தமிழ் மொழி பேசுவதால் ஏற்படும் இன்னல்கள் பற்றியும் கூறியிருக்கிறார்.
படம் முழுக்க தமிழ் மொழி பேசி அனைவரையும் கவர்ந்திருக்கிறார் பாவண்ணன். தெரியாத பல வார்த்தைகள் கூட இப்படத்தில் தெரிந்துக் கொள்ள முடிகிறது. குறிப்பாக ஒரு பாடலில் 247 எழுத்துக்களையும் சேர்த்திருப்பது சிறப்பு. படத்தின் நாயகி அஞ்சனா ராஜ் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் காமெடி காட்சிகள், சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். தற்போதுள்ள இளைஞர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படமாக உருவாக்கி இருக்கிறார்.
கஜேந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். மோகனராமனின் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘சொல்’ விழிப்புணர்வு.
அங்கேயும் இவர் தமிழில் பேசி வருகிறார். இதனால் பொதுமக்கள் இவரை கேலியாக பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து நாயகி அஞ்சனா ராஜ் ஊட்டி வருகிறார். ஆண்களால், பெண்கள் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பது பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ் தெரியாத அஞ்சனா ராஜ், தமிழ் தெரிந்துக் கொள்ள பாவண்ணனுடன் பழகுகிறார். இருவரும் நட்பாக பழகினாலும், பார்ப்பவர்கள் இவர்கள் காதலர்கள் என்று நினைத்து வருகிறார்கள். நாயகன் எங்கு சென்றாலும் ஜாதி ஒழிப்பு, உள்ளிட்ட பல விஷயங்களில் முற்போக்கு சிந்தனையுடன் இருக்கிறார். இதனால் இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது.
தமிழ் உயிர் மூச்சாக கொண்டிருக்கும் நாயகன், இந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபட்டார்? எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பாவண்ணன், தமிழ் மீது அதிக ஆர்வமும், பற்றும் கொண்டு இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடித்திருக்கிறார். தற்போதுள்ள இளைஞர்கள் தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கும் சூழ்நிலை இருப்பதாகவும், தமிழ் நாட்டில் தமிழ் மொழி பேசுவதால் ஏற்படும் இன்னல்கள் பற்றியும் கூறியிருக்கிறார்.
படம் முழுக்க தமிழ் மொழி பேசி அனைவரையும் கவர்ந்திருக்கிறார் பாவண்ணன். தெரியாத பல வார்த்தைகள் கூட இப்படத்தில் தெரிந்துக் கொள்ள முடிகிறது. குறிப்பாக ஒரு பாடலில் 247 எழுத்துக்களையும் சேர்த்திருப்பது சிறப்பு. படத்தின் நாயகி அஞ்சனா ராஜ் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் காமெடி காட்சிகள், சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். தற்போதுள்ள இளைஞர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படமாக உருவாக்கி இருக்கிறார்.
கஜேந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். மோகனராமனின் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘சொல்’ விழிப்புணர்வு.