அண்ணன் - தம்பிகளான ஜிங் யூவும், யூ சாங்கும் சிறுவயதிலேயே குங் பூ கலையை கற்று வருகின்றனர். இதில் அண்ணன் அவரது குங் பூ மாஸ்டரிடம் இருக்கும் இரும்பாலான குங் பூ ஷீவை திருடிவிடுகிறார். இதையடுத்து குங் பூ கலை பயில அவர் தகுதியில்லாதவர் என்று அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்.
இதையடுத்து அதுவரை கற்ற குங் பூ கலையை வைத்து ஒரு பாடிகார்டு கம்பெனியை தொடங்கி, அந்த ஊரில் இருக்கும் முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார். இந்நிலையில், வளர்ந்து பெயரியவனாகும் யூ சாங் நகரத்திற்கு வருகிறார். அங்கு பிரபலம் ஒருவரிடம் இருந்து கொலை செய்ய முயற்சி செய்யும் கும்பலை அடித்து துவம்ஷம் செய்கிறார்.
அதனை அவரது அண்ணனாக ஜிங் யூ பார்த்து, தனது தம்பியை தன்னுடன் அழைத்து செல்கிறார். இந்நிலையில், யூ சாங் காப்பாற்றிய அந்த நபர், தனது மகளுக்கு பாதுகாப்பு கேட்டு அங்கு வருகிறார். அவரது மகளுக்கு பாடிகார்டாக யூ சாங் செல்கிறார். சுதந்திரமாக இருக்க ஆசைப்படும் நாயகி லி யூ ஃபி, யூ சாங்கை கலட்டி விட்டு தனியாக செல்லும் நாயகிக்கு, வரும் ஆபத்துகளை யூ சாங் சமாளிக்கிறார்.
ஒரு கட்டத்தில் அந்த ஆபத்துக்கள் தனது அண்ணன் ஜிங் யூ மூலமாக வருவதை தெரிந்து கொள்ளும் யூ சாங் அடுத்ததாக என்ன செய்தார்? லி யூ ஃபியை எப்படி பாதுகாத்தார்? யூ சாங்கின் அண்ணன் ஏன் அவருக்கு எதிராக செயல்படுகிறார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
இயக்கம், நடிப்பு மட்டுமில்லாமல் குங் பூ கலையிலும் தேர்ந்தவராகவே யூ சாங் நடித்திருக்கிறார். எதிரிகள் 100 பேர் வந்தாலும் அவர்களை அசால்ட்டாக அடித்து நாலா பக்கமும் பறக்க விடுகிறார். அவருக்கு ஈடுகொடுக்கும் படியாக ஜிங் யூவின் நடிப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது. மற்றபடி லி யூ ஃபி, காலின் ஃசோ, மைக்கேல் சான் வாய் மேன் உள்ளிட்ட பலரும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
இயக்கத்தைப் பொறுத்தவரையில், வாக்கமான அண்ணன், தம்பி பழிவாங்குதல் கதையாக இருக்கிறது. ஹாலிவுட் படமாகவே இருந்தாலும், எத்தனை பேர் வந்தாலும் அவர்களை நாயகன் அடித்து துவைப்பது போன்ற காட்சிகள் ஏற்கும்படியாக இல்லை. அதேபோல் பிளாஷ்பேக் காட்சிகள் மாறி மாறி வருவது திரைக்கதைக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. மற்றபடி குங் பூ சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படியாகத் தான் இருக்கின்றன.
படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் `தி பாடிகார்ட்' பறக்க விடுகிறான்.
இதையடுத்து அதுவரை கற்ற குங் பூ கலையை வைத்து ஒரு பாடிகார்டு கம்பெனியை தொடங்கி, அந்த ஊரில் இருக்கும் முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார். இந்நிலையில், வளர்ந்து பெயரியவனாகும் யூ சாங் நகரத்திற்கு வருகிறார். அங்கு பிரபலம் ஒருவரிடம் இருந்து கொலை செய்ய முயற்சி செய்யும் கும்பலை அடித்து துவம்ஷம் செய்கிறார்.
அதனை அவரது அண்ணனாக ஜிங் யூ பார்த்து, தனது தம்பியை தன்னுடன் அழைத்து செல்கிறார். இந்நிலையில், யூ சாங் காப்பாற்றிய அந்த நபர், தனது மகளுக்கு பாதுகாப்பு கேட்டு அங்கு வருகிறார். அவரது மகளுக்கு பாடிகார்டாக யூ சாங் செல்கிறார். சுதந்திரமாக இருக்க ஆசைப்படும் நாயகி லி யூ ஃபி, யூ சாங்கை கலட்டி விட்டு தனியாக செல்லும் நாயகிக்கு, வரும் ஆபத்துகளை யூ சாங் சமாளிக்கிறார்.
ஒரு கட்டத்தில் அந்த ஆபத்துக்கள் தனது அண்ணன் ஜிங் யூ மூலமாக வருவதை தெரிந்து கொள்ளும் யூ சாங் அடுத்ததாக என்ன செய்தார்? லி யூ ஃபியை எப்படி பாதுகாத்தார்? யூ சாங்கின் அண்ணன் ஏன் அவருக்கு எதிராக செயல்படுகிறார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
இயக்கம், நடிப்பு மட்டுமில்லாமல் குங் பூ கலையிலும் தேர்ந்தவராகவே யூ சாங் நடித்திருக்கிறார். எதிரிகள் 100 பேர் வந்தாலும் அவர்களை அசால்ட்டாக அடித்து நாலா பக்கமும் பறக்க விடுகிறார். அவருக்கு ஈடுகொடுக்கும் படியாக ஜிங் யூவின் நடிப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது. மற்றபடி லி யூ ஃபி, காலின் ஃசோ, மைக்கேல் சான் வாய் மேன் உள்ளிட்ட பலரும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
இயக்கத்தைப் பொறுத்தவரையில், வாக்கமான அண்ணன், தம்பி பழிவாங்குதல் கதையாக இருக்கிறது. ஹாலிவுட் படமாகவே இருந்தாலும், எத்தனை பேர் வந்தாலும் அவர்களை நாயகன் அடித்து துவைப்பது போன்ற காட்சிகள் ஏற்கும்படியாக இல்லை. அதேபோல் பிளாஷ்பேக் காட்சிகள் மாறி மாறி வருவது திரைக்கதைக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. மற்றபடி குங் பூ சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படியாகத் தான் இருக்கின்றன.
படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் `தி பாடிகார்ட்' பறக்க விடுகிறான்.