நாயகன் அப்துல்லா (பிரகாஷ்) தன்னுடைய தாய்மாமாவான இமான் அண்ணாச்சியுடன் ஊர் ஊராக சென்று துணி விற்கும் தொழிலை செய்து வருகிறார். இவர்கள் இருக்கும் அதே ஊரில் சாமியாராக இருக்கும் கே.ஆர்.விஜயாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு செல்லும் இவர்களிடம், வியாபாரம் சிறப்பாக நடக்கும், ஆனால், எந்தப் பெண்ணையும் தொடக்கூடாது என்று கூறுகிறார் கே.ஆர்.விஜயா.
சாமியார் சொன்னபடி வியாபாரம் சிறப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், நாயகி சாரிகாவை பார்க்கிறார். பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். ஆனால், சாரிகாவோ ஒரு ஆவி என்று தெரியாமலேயே காதலித்து வருகிறார். இந்நிலையில், பிரகாஷ் பல பெண்களிடம் பேசுவதை பார்க்கும் ஊர்மக்கள், அவரை அடித்து கொன்று விடுகிறார்கள்.
பிரகாஷின் பிணத்தை வைத்துக் கொண்டு இரவில் அழுதுக் கொண்டு ஊர் மக்களை அச்சுறுத்தி வருகிறார் சாரிகா. இந்நிலையில், மற்றொரு நாயகியான ஜோதிஷா தனியார் தொலைக்காட்சியில் பணி புரிந்துக் கொண்டு, ஆவி, இருக்கிறதா? இல்லையா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஊர் மக்கள் பலரும் அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு போன் செய்து, எங்கள் ஊரில் ஒரு ஆவி இருப்பதாக அழைக்கிறார்கள். இதைப்பற்றி அறிய கேமராமேன் அப்துல்லா (சிவா) உடன் அந்த ஊருக்கு வருகிறார். தன்னுடைய காதலன் பிரகாஷ் உருவம் போல் இருக்கும் சிவாவை பார்த்தவுடன் அவரை அடைய நினைக்கிறார் சாரிகா.
இறுதியில், ஆவியாக இருக்கும் சாரிகாவின் ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
முதல் படத்திலேயே பிரகாஷ், சிவா என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அப்துல்லா. கிராமத்து இளைஞன், நகர இளைஞன் என நடிப்பில் வித்தியாசம் காண்பிக்க முயற்சித்திருக்கிறார். சாரிகா ஆவியாக வந்து மிரட்டியிருக்கிறார். கிளாமருடன் மாடர்ன் மோகினியாக வலம் வந்திருக்கிறார். மற்றொரு நாயகியான ஜோதிஷா தொலைக்காட்சி நிருபராக துணிச்சலுடன் நடித்திருக்கிறார். அவருக்கே உரிய பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இமான் அண்ணாச்சி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கிறார் கே.ஆர்.விஜயா. சாமியார் வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மோகினி படம் என்றாலே ஒருவர் மீது ஆசைப்படுவது, அவரை அடைய விரும்புவது என்று வழக்கமான கதையை மையமாக வைத்தே உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ராசாவிக்ரம். தற்போதுள்ள தொழில் நுட்பத்திற்கு ஏற்றார் போல் மாய மோகினியாக உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள். கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகளை படத்தில் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். ராஜனின் ஒளிப்பதிவு படத்திற்கு கைக்கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘மாய மோகினி’ பழைய பேய்.
சாமியார் சொன்னபடி வியாபாரம் சிறப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், நாயகி சாரிகாவை பார்க்கிறார். பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். ஆனால், சாரிகாவோ ஒரு ஆவி என்று தெரியாமலேயே காதலித்து வருகிறார். இந்நிலையில், பிரகாஷ் பல பெண்களிடம் பேசுவதை பார்க்கும் ஊர்மக்கள், அவரை அடித்து கொன்று விடுகிறார்கள்.
பிரகாஷின் பிணத்தை வைத்துக் கொண்டு இரவில் அழுதுக் கொண்டு ஊர் மக்களை அச்சுறுத்தி வருகிறார் சாரிகா. இந்நிலையில், மற்றொரு நாயகியான ஜோதிஷா தனியார் தொலைக்காட்சியில் பணி புரிந்துக் கொண்டு, ஆவி, இருக்கிறதா? இல்லையா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஊர் மக்கள் பலரும் அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு போன் செய்து, எங்கள் ஊரில் ஒரு ஆவி இருப்பதாக அழைக்கிறார்கள். இதைப்பற்றி அறிய கேமராமேன் அப்துல்லா (சிவா) உடன் அந்த ஊருக்கு வருகிறார். தன்னுடைய காதலன் பிரகாஷ் உருவம் போல் இருக்கும் சிவாவை பார்த்தவுடன் அவரை அடைய நினைக்கிறார் சாரிகா.
இறுதியில், ஆவியாக இருக்கும் சாரிகாவின் ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
முதல் படத்திலேயே பிரகாஷ், சிவா என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அப்துல்லா. கிராமத்து இளைஞன், நகர இளைஞன் என நடிப்பில் வித்தியாசம் காண்பிக்க முயற்சித்திருக்கிறார். சாரிகா ஆவியாக வந்து மிரட்டியிருக்கிறார். கிளாமருடன் மாடர்ன் மோகினியாக வலம் வந்திருக்கிறார். மற்றொரு நாயகியான ஜோதிஷா தொலைக்காட்சி நிருபராக துணிச்சலுடன் நடித்திருக்கிறார். அவருக்கே உரிய பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இமான் அண்ணாச்சி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கிறார் கே.ஆர்.விஜயா. சாமியார் வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மோகினி படம் என்றாலே ஒருவர் மீது ஆசைப்படுவது, அவரை அடைய விரும்புவது என்று வழக்கமான கதையை மையமாக வைத்தே உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ராசாவிக்ரம். தற்போதுள்ள தொழில் நுட்பத்திற்கு ஏற்றார் போல் மாய மோகினியாக உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள். கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகளை படத்தில் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். ராஜனின் ஒளிப்பதிவு படத்திற்கு கைக்கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘மாய மோகினி’ பழைய பேய்.