ஜெயப்பிரகாஷின் மகனான நாயகன் எம்.மதன் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று ஆசையில் அதற்காக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், தனது அம்மாவுடன் கோயிலுக்கு செல்லும் மதன், அங்கு நாயகி உபசனா ராயை பார்க்கிறார். முதல் சந்திப்பில் அவள் மீது ஒருவித ஈர்ப்பு மட்டுமே வருகிறது. உபசனா ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் தான் மதனின் அக்காவின் குழந்தைகளும் படிக்கிறார்கள்.
இந்நிலையில், தனது நண்பன் அப்புக்குட்டியின் திருமணத்திற்கு செல்லும் மதனுக்கு அங்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. திருமணப் பெண்ணின் தோழியாக உபசனா ராய் வர, அப்புக்குட்டி இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைக்கிறார். இதையடுத்து நண்பர்களாகும் இருவரும் ஒரு கட்டத்தில் காதலர்களாகவும் மாறி விடுகின்றனர். மதனின் வீட்டில் இவர்களது காதலுக்கு பச்சை கொடி காட்டினாலும், நாயகியின் அப்பா சினிமா துறையினருக்கு பெண் கொடுக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறார்.
அவர்களிடம் ஒரு நிலையான சம்பாத்தியம் இருக்காது என்று கூற, ஒரு வாரத்திற்குள் தான் ஒரு லட்ச ரூபாய் சம்பாதித்து வருவதாக நாயகன் சபதம் செய்கிறார். சபதத்தில் வெற்றி பெற்றால் பெண்ணை கொடுப்பதாக உபசனாவின் அப்பாவும் கூற, விளம்பரம் ஒன்றை இயக்கி மதன் ஒன்றரை லட்சம் சம்பாதித்து விடுகிறார். இதையடுத்து இருவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், அந்த ஊரிலேயே முக்கிய தாதாவாக வரும் டேனியல் பாலாஜி கொலை ஒன்றை செய்துவிட்டு, கொலை செய்யப்பட்டவரின் மொபைலில் இருந்து ஏதோ ஒரு எண்ணை அழுத்த, அந்த கால் மதனுக்கு செல்கிறது. மதன் போனை எடுத்ததும் கால் துண்டிக்கப்படுவதால், மதன் அந்த நம்பருக்கு போன் செய்கிறார். ஆனால் எதிர்முனையில் இருந்து பேச்சு ஏதும் வராததால், தனது காதலி தான் தன்னிடம் விளையாடுகிறாள் என்று நாயகன் மீண்டும் மீண்டும் போன் செய்கிறார். இதனால் போலீசிடமும் மாட்டுகிறார்.
இவ்வாறாக போலீசில் சிக்கும் மதன் தனது குற்றமற்றவர் என்பதை நிரூபித்தாரா? தன்னை போலீசில் மாட்டி விட காரணமான டேனியல் பாலாஜியை பழிவாங்கினாரா? தனது காதலியை திருமணம் செய்தாரா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் மதன் படத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். உபாசனா ராயின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.
டேனியல் பாலாஜி வில்லனுக்கே உரிய தொணியில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் படத்தில் அவருக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லை என்பதே நிதர்சனம். ஜெயப்பிரகாஷ், ஜான் விஜய், மீரா கிருஷ்ணன் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அப்புக்குட்டி, சாம்ஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், லொல்லு சபா மனோகர் காமெடியில் ஒருசில இடங்களில் சிரிக்க வைக்கின்றனர்.
இயக்குநர் எம்.மதன் அவரே நடித்து இயக்கியிருப்பதால் காட்சிகளில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது போல தோன்றுகிறது. படத்தில் கதைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை இயக்குநர் திரைக்கதைக்கு கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார்.
தயரத்னமின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லை. பின்னணி இசையும் சுமார் ரகம் தான். பி.ஜி.வெற்றிமாறனின் ஒளிப்பதிவு ஓரளவுக்கு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் `எண்பத்தெட்டு' செவுத்துல முட்டு.
இந்நிலையில், தனது நண்பன் அப்புக்குட்டியின் திருமணத்திற்கு செல்லும் மதனுக்கு அங்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. திருமணப் பெண்ணின் தோழியாக உபசனா ராய் வர, அப்புக்குட்டி இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைக்கிறார். இதையடுத்து நண்பர்களாகும் இருவரும் ஒரு கட்டத்தில் காதலர்களாகவும் மாறி விடுகின்றனர். மதனின் வீட்டில் இவர்களது காதலுக்கு பச்சை கொடி காட்டினாலும், நாயகியின் அப்பா சினிமா துறையினருக்கு பெண் கொடுக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறார்.
அவர்களிடம் ஒரு நிலையான சம்பாத்தியம் இருக்காது என்று கூற, ஒரு வாரத்திற்குள் தான் ஒரு லட்ச ரூபாய் சம்பாதித்து வருவதாக நாயகன் சபதம் செய்கிறார். சபதத்தில் வெற்றி பெற்றால் பெண்ணை கொடுப்பதாக உபசனாவின் அப்பாவும் கூற, விளம்பரம் ஒன்றை இயக்கி மதன் ஒன்றரை லட்சம் சம்பாதித்து விடுகிறார். இதையடுத்து இருவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், அந்த ஊரிலேயே முக்கிய தாதாவாக வரும் டேனியல் பாலாஜி கொலை ஒன்றை செய்துவிட்டு, கொலை செய்யப்பட்டவரின் மொபைலில் இருந்து ஏதோ ஒரு எண்ணை அழுத்த, அந்த கால் மதனுக்கு செல்கிறது. மதன் போனை எடுத்ததும் கால் துண்டிக்கப்படுவதால், மதன் அந்த நம்பருக்கு போன் செய்கிறார். ஆனால் எதிர்முனையில் இருந்து பேச்சு ஏதும் வராததால், தனது காதலி தான் தன்னிடம் விளையாடுகிறாள் என்று நாயகன் மீண்டும் மீண்டும் போன் செய்கிறார். இதனால் போலீசிடமும் மாட்டுகிறார்.
இவ்வாறாக போலீசில் சிக்கும் மதன் தனது குற்றமற்றவர் என்பதை நிரூபித்தாரா? தன்னை போலீசில் மாட்டி விட காரணமான டேனியல் பாலாஜியை பழிவாங்கினாரா? தனது காதலியை திருமணம் செய்தாரா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் மதன் படத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். உபாசனா ராயின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.
டேனியல் பாலாஜி வில்லனுக்கே உரிய தொணியில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் படத்தில் அவருக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லை என்பதே நிதர்சனம். ஜெயப்பிரகாஷ், ஜான் விஜய், மீரா கிருஷ்ணன் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அப்புக்குட்டி, சாம்ஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், லொல்லு சபா மனோகர் காமெடியில் ஒருசில இடங்களில் சிரிக்க வைக்கின்றனர்.
இயக்குநர் எம்.மதன் அவரே நடித்து இயக்கியிருப்பதால் காட்சிகளில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது போல தோன்றுகிறது. படத்தில் கதைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை இயக்குநர் திரைக்கதைக்கு கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார்.
தயரத்னமின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லை. பின்னணி இசையும் சுமார் ரகம் தான். பி.ஜி.வெற்றிமாறனின் ஒளிப்பதிவு ஓரளவுக்கு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் `எண்பத்தெட்டு' செவுத்துல முட்டு.