கார்த்திக் நாகராஜன் கிராமத்து கூத்து கலைஞர். இவர் சினிமா ஆசையால் சென்னை வருகிறார். கூடவே தன்னுடைய மனைவியையும் அழைத்து வருகிறார். ஆனால் நடிக்க எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, ஒரு நடிகையின் மேக்கப் மேனின் உதவியை நாடுகிறார். அவர் மூலம் சினிமாவில் லைட்மேன் ஆக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த வேலை கடினமாக இருக்கவே, அவரை மதுப்பழக்கம் தொற்றிக் கொண்டு, அவரது பாதையை மாற்றிவிடுகிறது. இப்படியாக உண்மையிலேயே ‘லைட்மேன்’களாக இருப்பவர்களின் வாழ்க்கையை அவர்களே சொல்வதும் படமாக்கப்பட்டிருகிறது.
திரைஉலகில் லைட்மேன்களின் பங்கு என்ன? திரை உலகத்துக்கு வெளிச்சம் தரும் இவர்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்து இருப்பது ஏன்? என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்வது மீதிக்கதை.
நாயகன் கார்த்திக் நாகராஜன் கூத்து நடிகராக வரும் போது, பேசும் நீண்ட வசனங்களும், தமிழ் உச்சரிப்பும் அருமை. லைட்மேன் பாத்திரமாகவே மாறி ரசிகர்களை ஒன்ற வைக்கிறார். அவரது மனைவியாக வரும் ஜெனிபர், லைட்மேன்கள் வாசகன், கோவிந்த சுவாமிநாதன் உள்பட அனைவரும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்கள்.
இயக்குனர் வெங்கடேஷ் குமார்ஜியின் வசனம் ‘லைட்மேன்’ படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறது. பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்த இவரது படைப்பும் குருவின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. கதையுடன், லைட்மேன்களின் வாழ்க்கை, வலி, வேதனைகளையும் அவர்களிடமே கேட்டு படத்துடன் இணைத்திருப்பது புதிய யுக்தி.
பல நடிகர்-நடிகைகளுக்கு ஏணியாக இருக்கும் ‘லைட்மேன்கள்’ பற்றி இதுவரை வெளிச்சத்துக்கு வராத உண்மைகளை, சோக வாழ்க்கையை இயக்குனர் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். ராகுல் ஒளிப்பதிவு நெகிழ வைக்கும் யதார்த்தம். டோனி பிரிட்டோவின் இசையை ரசிக்கலாம். காட்சிகளுக்கும் பலம் சேர்க்கிறது.
லைட்மேன்களின் இருண்ட வாழ்க்கையை தனிகதையாக உருவாக்கி அதில் கொஞ்சம் சினிமா அம்சங்களையும் சேர்த்து இருந்தால், படம் ரசிகர்களையும் தன் வெளிச்சத்தால் கவர்ந்து இருக்கும். என்றாலும், இயக்குனர் சொல்ல நினைத்ததை லைட்மேன்களின் கதையுடன் அனுபவத்தையும் கலந்து சொல்லி அவரது நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில் ‘லைட்மேன்’ திரை கலைஞர்களுக்கு வெளிச்சம்.
இந்த வேலை கடினமாக இருக்கவே, அவரை மதுப்பழக்கம் தொற்றிக் கொண்டு, அவரது பாதையை மாற்றிவிடுகிறது. இப்படியாக உண்மையிலேயே ‘லைட்மேன்’களாக இருப்பவர்களின் வாழ்க்கையை அவர்களே சொல்வதும் படமாக்கப்பட்டிருகிறது.
திரைஉலகில் லைட்மேன்களின் பங்கு என்ன? திரை உலகத்துக்கு வெளிச்சம் தரும் இவர்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்து இருப்பது ஏன்? என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்வது மீதிக்கதை.
நாயகன் கார்த்திக் நாகராஜன் கூத்து நடிகராக வரும் போது, பேசும் நீண்ட வசனங்களும், தமிழ் உச்சரிப்பும் அருமை. லைட்மேன் பாத்திரமாகவே மாறி ரசிகர்களை ஒன்ற வைக்கிறார். அவரது மனைவியாக வரும் ஜெனிபர், லைட்மேன்கள் வாசகன், கோவிந்த சுவாமிநாதன் உள்பட அனைவரும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்கள்.
இயக்குனர் வெங்கடேஷ் குமார்ஜியின் வசனம் ‘லைட்மேன்’ படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறது. பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்த இவரது படைப்பும் குருவின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. கதையுடன், லைட்மேன்களின் வாழ்க்கை, வலி, வேதனைகளையும் அவர்களிடமே கேட்டு படத்துடன் இணைத்திருப்பது புதிய யுக்தி.
பல நடிகர்-நடிகைகளுக்கு ஏணியாக இருக்கும் ‘லைட்மேன்கள்’ பற்றி இதுவரை வெளிச்சத்துக்கு வராத உண்மைகளை, சோக வாழ்க்கையை இயக்குனர் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். ராகுல் ஒளிப்பதிவு நெகிழ வைக்கும் யதார்த்தம். டோனி பிரிட்டோவின் இசையை ரசிக்கலாம். காட்சிகளுக்கும் பலம் சேர்க்கிறது.
லைட்மேன்களின் இருண்ட வாழ்க்கையை தனிகதையாக உருவாக்கி அதில் கொஞ்சம் சினிமா அம்சங்களையும் சேர்த்து இருந்தால், படம் ரசிகர்களையும் தன் வெளிச்சத்தால் கவர்ந்து இருக்கும். என்றாலும், இயக்குனர் சொல்ல நினைத்ததை லைட்மேன்களின் கதையுடன் அனுபவத்தையும் கலந்து சொல்லி அவரது நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில் ‘லைட்மேன்’ திரை கலைஞர்களுக்கு வெளிச்சம்.