ஆரூடத்திற்கும் உளவியலுக்கும் இடையில் நடைபெறும் மோதலில் ஏற்படும் விளைவுகளே படத்தின் கதை. மனோதத்துவ நிபுணரான நாயகன் பிரதாப், இவருக்கு ஜோசியத்தின் மீது நம்பிக்கையே கிடையாது. கை, கால் செயலிழந்த பிரதாப்புக்கும் ஜோசியர் ஒருவருக்கும் இடையே மோதல் இருந்துகொண்ட வருகிறது.
ஒருநாள் ஜோசியர் பிரதாப்பை சந்தித்து, உனக்கு திருமணமே நடக்காது, அப்படி நடந்தாலும் உன் மனைவியோடு நீண்டகாலம் வாழமுடியாது. அதேபோல், உனக்கு குழந்தையும் பிறக்காது, அப்படி பிறந்தாலும் இது உயிரோடு இருக்காது. உன்னால் இந்த வாழ்க்கையை நிம்மதியாகவும் வாழமுடியாது என்று கூறிவிட்டு செல்கிறார்.
இதை பொய்யாக்கி நிரூபிக்க அவர் எடுக்கிற சில முயற்சிகள் சமூகத்தில் பலவித விளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்த விளைவுகள் என்னென்ன? ஜோசியத்தை அவர் பொய்யாக்கி காட்டினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் தலைப்பான பிரகாமியம் என்பது 64 கலைகளில் ஒன்றாகும். மற்றொருவரின் மனதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கலையான கூடு விட்டு கூடும் பாயும் வித்தையை இது குறிக்கிறது. தமிழ் சினிமாவுக்கு அரிதான இந்த கதையை இயக்குனர் பிரதாப் தைரியத்துடன் கையிலெடுத்திருக்கிறார். ஆனால், அதை அழகாகவும், தெளிவாகவும் காட்சிப்படுத்துவதற்கு தவறியிருக்கிறார்.
படத்தின் இயக்குனரும், ஹீரோவும் ஒருவரே. இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இரண்டுமே ரொம்பவும் மிகையாக இருப்பதால் ரசிக்க முடியாமல் போகிறது. இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். இரண்டு பேரின் நடிப்பும் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது. படத்தில் அனைவரின் வசனங்கள் உச்சரிப்பும் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது. எனவே, அவர்கள் அனைவரையும் கதையோடு ஒன்றி பார்க்க முடியவில்லை.
மொத்தத்தில் ‘பிரகாமியம்’ பிரியமில்லை.
ஒருநாள் ஜோசியர் பிரதாப்பை சந்தித்து, உனக்கு திருமணமே நடக்காது, அப்படி நடந்தாலும் உன் மனைவியோடு நீண்டகாலம் வாழமுடியாது. அதேபோல், உனக்கு குழந்தையும் பிறக்காது, அப்படி பிறந்தாலும் இது உயிரோடு இருக்காது. உன்னால் இந்த வாழ்க்கையை நிம்மதியாகவும் வாழமுடியாது என்று கூறிவிட்டு செல்கிறார்.
இதை பொய்யாக்கி நிரூபிக்க அவர் எடுக்கிற சில முயற்சிகள் சமூகத்தில் பலவித விளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்த விளைவுகள் என்னென்ன? ஜோசியத்தை அவர் பொய்யாக்கி காட்டினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் தலைப்பான பிரகாமியம் என்பது 64 கலைகளில் ஒன்றாகும். மற்றொருவரின் மனதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கலையான கூடு விட்டு கூடும் பாயும் வித்தையை இது குறிக்கிறது. தமிழ் சினிமாவுக்கு அரிதான இந்த கதையை இயக்குனர் பிரதாப் தைரியத்துடன் கையிலெடுத்திருக்கிறார். ஆனால், அதை அழகாகவும், தெளிவாகவும் காட்சிப்படுத்துவதற்கு தவறியிருக்கிறார்.
படத்தின் இயக்குனரும், ஹீரோவும் ஒருவரே. இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இரண்டுமே ரொம்பவும் மிகையாக இருப்பதால் ரசிக்க முடியாமல் போகிறது. இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். இரண்டு பேரின் நடிப்பும் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது. படத்தில் அனைவரின் வசனங்கள் உச்சரிப்பும் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது. எனவே, அவர்கள் அனைவரையும் கதையோடு ஒன்றி பார்க்க முடியவில்லை.
மொத்தத்தில் ‘பிரகாமியம்’ பிரியமில்லை.