அந்தமானில் இருந்து சென்னை வரும் விமானம் நடுவழியில் விபத்துக்குள்ளாகிறது. அப்போது, அதில் பயணம் செய்த ஒரு கர்ப்பிணிக்கு குழந்தை பிறக்கிறது. தாய் இறந்துவிட, குழந்தையை தலைவாசல் விஜய் தனது காப்பகத்தில் வைத்து வளர்த்து வருகிறார். அந்த குழந்தைதான் நாயகன் ரிச்சர்டு. வளர்ந்து பெரியவனாகும் ரிச்சர்டு, மண் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி படிப்பை படித்து வருகிறார்.
ரிச்சர்டு தனது ஆராய்ச்சியின் மூலம் ஒரு மெஷின் ஒன்றை கண்டுபிடிக்கிறார். மண்ணின் தன்மை பற்றி அனைவரும் எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் அந்த மெஷினை உருவாக்கி வருகிறார். இதற்கிடையில், நாயகியை எதேச்சையாக சந்திக்கும் நாயகன் முதலில் அவளுடன் நட்பாக பழகிறார். பிறகு, அந்த நட்பு காதலாகிறது.
இந்நிலையில், பல அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்துவிழுந்து நிறைய பேர் இறக்கிறார்கள். இடிந்து விழுந்த கட்டிடம் எழுப்பப்பட்ட இடத்தின் மண்ணை நாயகன் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அந்த இடத்தில் கட்டிடமே எழுப்ப முடியாத அளவில் மண்ணின் தன்மை இருப்பதை கண்டறிகிறார். இந்த விபத்துக்கு காரணமான வில்லனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, கமிஷனரிடம் புகாராக கொடுக்கிறார்.
கமிஷனரும் வில்லனை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். அதன்படி, வில்லனும் கைதாகிறார். பின்னர், தனது பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் சிறையில் இருந்து வெளியே வரும் வில்லன், தனது ஆட்களை வைத்து தனக்கு எதிராக ஆதாரங்களை திரட்டிய ரிச்சர்ட்டை அடித்து துவம்சம் செய்கிறார்.
ரிச்சர்டு இறந்துவிட்டதாக வில்லன் நினைத்துக் கொண்டிருக்கையில், அவனை காப்பாற்றி தலைவாசல் விஜய்யும், நாயகியும் அந்தமானுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்தமானுக்கு செல்லும் நாயகன், அங்கேயும் வில்லன் சட்டவிரோதமாக போதை மருந்து கடத்திக் கொண்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். இதையறியும் வில்லன், நாயகன் உயிரோடு இருப்பதை அறிந்து அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்.
இதிலிருந்து நாயகன் தப்பித்தாரா? தனது காதலியுடன் மீண்டும் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் ரிச்சர்டு கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் மற்றொரு படம். இப்படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆராய்ச்சி மாணவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நாயகி மனோசித்ரா பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார்.
தலைவாசல் விஜய், மனோபாலா, கிரேன் மனோகர், சாம்ஸ், போண்டா மணி உள்ளிட்டோருக்கு சரியான வாய்ப்புகள் கொடுக்கவில்லை. இருப்பினும், தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் ஆதவன் உண்மைக் கதையோடு சேர்ந்த சமூகத்திற்கு அத்தியாவசியமான கருத்தை படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார். நடிகர்களை இன்னும் கொஞ்சம் அழகாக வேலை வாங்கியிருக்கலாம். திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.
செல்வாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். செல்வதாசனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘அந்தமான்’ பார்க்கலாம்.
ரிச்சர்டு தனது ஆராய்ச்சியின் மூலம் ஒரு மெஷின் ஒன்றை கண்டுபிடிக்கிறார். மண்ணின் தன்மை பற்றி அனைவரும் எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் அந்த மெஷினை உருவாக்கி வருகிறார். இதற்கிடையில், நாயகியை எதேச்சையாக சந்திக்கும் நாயகன் முதலில் அவளுடன் நட்பாக பழகிறார். பிறகு, அந்த நட்பு காதலாகிறது.
இந்நிலையில், பல அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்துவிழுந்து நிறைய பேர் இறக்கிறார்கள். இடிந்து விழுந்த கட்டிடம் எழுப்பப்பட்ட இடத்தின் மண்ணை நாயகன் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அந்த இடத்தில் கட்டிடமே எழுப்ப முடியாத அளவில் மண்ணின் தன்மை இருப்பதை கண்டறிகிறார். இந்த விபத்துக்கு காரணமான வில்லனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, கமிஷனரிடம் புகாராக கொடுக்கிறார்.
கமிஷனரும் வில்லனை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். அதன்படி, வில்லனும் கைதாகிறார். பின்னர், தனது பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் சிறையில் இருந்து வெளியே வரும் வில்லன், தனது ஆட்களை வைத்து தனக்கு எதிராக ஆதாரங்களை திரட்டிய ரிச்சர்ட்டை அடித்து துவம்சம் செய்கிறார்.
ரிச்சர்டு இறந்துவிட்டதாக வில்லன் நினைத்துக் கொண்டிருக்கையில், அவனை காப்பாற்றி தலைவாசல் விஜய்யும், நாயகியும் அந்தமானுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்தமானுக்கு செல்லும் நாயகன், அங்கேயும் வில்லன் சட்டவிரோதமாக போதை மருந்து கடத்திக் கொண்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். இதையறியும் வில்லன், நாயகன் உயிரோடு இருப்பதை அறிந்து அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்.
இதிலிருந்து நாயகன் தப்பித்தாரா? தனது காதலியுடன் மீண்டும் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் ரிச்சர்டு கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் மற்றொரு படம். இப்படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆராய்ச்சி மாணவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நாயகி மனோசித்ரா பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார்.
தலைவாசல் விஜய், மனோபாலா, கிரேன் மனோகர், சாம்ஸ், போண்டா மணி உள்ளிட்டோருக்கு சரியான வாய்ப்புகள் கொடுக்கவில்லை. இருப்பினும், தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் ஆதவன் உண்மைக் கதையோடு சேர்ந்த சமூகத்திற்கு அத்தியாவசியமான கருத்தை படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார். நடிகர்களை இன்னும் கொஞ்சம் அழகாக வேலை வாங்கியிருக்கலாம். திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.
செல்வாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். செல்வதாசனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘அந்தமான்’ பார்க்கலாம்.