ஜப்பானுக்கும் சீனாவுக்கும் 1946-ல் நடைபெற்ற போருக்கு பிறகு சீனாவில் உள்நாட்டு போர் ஆரம்பமானது. இந்த உள்நாட்டு போரில் ஆக் என்பவன் ஒரு குழுவுக்கு தலைமை தாங்கி புலி மலையில் வசித்து வருகிறான். அவர்களை எதிர்த்து போராடும் குழுவை தலைவன் என்பவன் வழிநடத்துகிறான்.
போரில் ஜப்பான் விட்டுச் சென்ற அதிநவீன ஆயுதங்கள் எல்லாம் ஆக் குழுவின் வசம் இருக்கிறது. அதை வைத்து பொதுமக்களிடம் கொள்ளையடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறான் ஆக். அவர்களின் ஆயுத பலத்தை எதிர்த்து போராடி வருகிறான் தலைவன்.
இவர்கள் இருவரால் நாட்டில் பெரிய கலவரம் ஏற்பட்டு வருவதை உணர்ந்த அரசாங்கம், பி.எல்.ஏ. என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு தலைவராக நாயகன் கன்யூ காங்கை நியமிக்கிறது. இவன் தலைமையில் 30 பேர் கொண்ட ஒரு குழு, புலி மலையை நோக்கி பயணமாகிறது. அதேநேரத்தில் பி.எல்.ஏ.வுக்கு உறுதுணையாக அரசாங்கம் நர்ஸ் ஒருவரையும், படை வீரன் ஒருவரையும் அனுப்பி வைக்கிறது. அவர்கள் எதிரிக்கூட்டத்துக்குள் சென்று உளவாளி போல் செயல்பட்டு பி.எல்.ஏ.வுக்கு தகவல் கொடுப்பதில் வல்லவர்கள்.
இறுதியில், பி.எல்.ஏ.வுக்கு இவர்களின் செயல்பாடு எந்தளவுக்கு உதவியது. புலிமலையை பி.எல்.ஏ. அமைப்பு கைப்பற்றியதா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தின் கதை முழுக்க 1950-களில் நடப்பதுபோல் படமாக்கியிருக்கிறார்கள். அந்தக்காலத்தில் பயன்படுத்தும் துப்பாக்கி, ஆயுதங்கள், உடைகள் என தேடிக் கண்டுபிடித்து இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். பனி மலையில் புலியிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகள் எல்லாம் புல்லரிக்க வைக்கின்றது.
அதேபோல், படத்தில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் கதை நகர்வது கொஞ்சம் மெதுவாக இருந்தாலும், பிறகு வேகம் எடுக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
வித்தியாசமான தலைமுடி, வித்தியாசமான உடைகள் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் இயக்குனர் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்திருக்கிறது. பழைய காலத்தில் நடப்பதுபோன்ற கதையம்சத்தில் இருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளால் படம் வெகுவாக கவர்கிறது.
மொத்தத்தில் ‘புலிமலை வேட்டை’ வேகம்.
போரில் ஜப்பான் விட்டுச் சென்ற அதிநவீன ஆயுதங்கள் எல்லாம் ஆக் குழுவின் வசம் இருக்கிறது. அதை வைத்து பொதுமக்களிடம் கொள்ளையடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறான் ஆக். அவர்களின் ஆயுத பலத்தை எதிர்த்து போராடி வருகிறான் தலைவன்.
இவர்கள் இருவரால் நாட்டில் பெரிய கலவரம் ஏற்பட்டு வருவதை உணர்ந்த அரசாங்கம், பி.எல்.ஏ. என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு தலைவராக நாயகன் கன்யூ காங்கை நியமிக்கிறது. இவன் தலைமையில் 30 பேர் கொண்ட ஒரு குழு, புலி மலையை நோக்கி பயணமாகிறது. அதேநேரத்தில் பி.எல்.ஏ.வுக்கு உறுதுணையாக அரசாங்கம் நர்ஸ் ஒருவரையும், படை வீரன் ஒருவரையும் அனுப்பி வைக்கிறது. அவர்கள் எதிரிக்கூட்டத்துக்குள் சென்று உளவாளி போல் செயல்பட்டு பி.எல்.ஏ.வுக்கு தகவல் கொடுப்பதில் வல்லவர்கள்.
இறுதியில், பி.எல்.ஏ.வுக்கு இவர்களின் செயல்பாடு எந்தளவுக்கு உதவியது. புலிமலையை பி.எல்.ஏ. அமைப்பு கைப்பற்றியதா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தின் கதை முழுக்க 1950-களில் நடப்பதுபோல் படமாக்கியிருக்கிறார்கள். அந்தக்காலத்தில் பயன்படுத்தும் துப்பாக்கி, ஆயுதங்கள், உடைகள் என தேடிக் கண்டுபிடித்து இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். பனி மலையில் புலியிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகள் எல்லாம் புல்லரிக்க வைக்கின்றது.
அதேபோல், படத்தில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் கதை நகர்வது கொஞ்சம் மெதுவாக இருந்தாலும், பிறகு வேகம் எடுக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
வித்தியாசமான தலைமுடி, வித்தியாசமான உடைகள் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் இயக்குனர் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்திருக்கிறது. பழைய காலத்தில் நடப்பதுபோன்ற கதையம்சத்தில் இருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளால் படம் வெகுவாக கவர்கிறது.
மொத்தத்தில் ‘புலிமலை வேட்டை’ வேகம்.