சர்க்கஸே கதியென்று கிடக்கும் சைவ சிங்கம், அங்கிருக்க பிடிக்காமல் ஒருநாள் சர்க்கஸ் கூடாரத்தில் தீ விபத்து ஏற்பட, இதுதான் தருணம் என்று அங்கிருந்து தப்பித்து, மோட்டு பட்லு வசிக்கும் நகரத்துக்குள் புகுந்துவிடுகிறது. சிங்கத்தை பார்த்து பயப்படும் பொதுமக்கள் மத்தியில், மோட்டுவும் பட்லுவும் அந்த சிங்கத்தை பிடிக்கின்றனர்.
பிடிபட்ட சிங்கத்தை காட்டுக்குள் கொண்டு செல்ல திட்டமிடுகையில், விஞ்ஞானி ஒருவரின் அபூர்வ கண்டுபிடிப்பால் சிங்க பாஷையை புரிந்துகொண்டு, அந்த சிங்கம் எங்கிருந்து வந்தது, அதன் நிலைமை என்ன? என்பதை அறிந்துகொள்கிறார்கள். சர்க்கஸிலேயே வாழ்ந்ததால் அந்த சிங்கத்தை காட்டுக்குள் கொண்டுவிட்டால் அங்குள்ள விலங்குகளால் சிங்கத்துக்கு ஆபத்து ஏற்படும் என்று எண்ணி, அந்த சிங்கத்தை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதேநேரத்தில் காட்டுக்குள் ராஜாவாக வாழ்ந்துவரும் மற்றொரு சிங்கம் ஒன்று, அந்த காட்டை அழிக்க நினைக்கும் வேட்டைக்காரர்களிடமிருந்து தனது கூட்டாளிகளையும், காடுகளையும் காப்பாற்ற போராடுகிறது. அந்த போராட்டத்தில் அந்த சிங்கம் ஒருநாள் வீரமரணம் அடைய, வேட்டைக்காரர்களுக்கு சாதகமாக போய்விடுகிறது.
மோட்டு பட்லுவுக்கு இந்த விஷயம் தெரிந்துவிடவே, தங்களிடம் இருக்கும் சர்க்கஸ் சிங்கத்தை, காட்டு ராஜா சிங்கம் போல் நடிக்க வைத்து காட்டை அழிக்க நினைப்பவர்களை துரத்திவிட நினைக்கிறார்கள். ஆனால், சர்க்கஸ் சிங்கத்துக்கோ கம்பீரமாக கர்ஜிக்க கூட முடியவில்லை. அப்படியிருக்கையில், எப்படி அவர்களை துரத்த முடியும் என்று எண்ணும் மோட்லு, பட்லு சர்க்கஸ் சிங்கத்துக்கு பயிற்சி கொடுக்கிறார்கள்.
இறுதியில், அந்த பயிற்சியில் சர்க்கஸ் சிங்கம் வெற்றி பெற்று, வேட்டைக்காரர்களை விரட்டி காட்டை காப்பாற்றியதா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் தொடரான ‘மோட்டு பட்லு’ திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. கார்ட்டூன் படம் என்று அலட்சியமாக படம் பார்க்க சென்றவர்களுக்கு ஆச்சர்யம்தான் வருகிறது. நம்மையும் அறியாமல் படத்துக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது படம்.
சைவ சிங்கத்துடன் பட்லுவும், மோட்டுவும் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. குழந்தைகளுக்கான படம் என்றாலும் ஆக்ஷன், அட்வெஞ்சர், உணர்வுப்பூர்வமான காட்சிகளும் படத்தில் உண்டு. படத்தில் இடம்பெறும் வசனங்களும் குழந்தைகளின் மனதில் எளிதாக பதியும்படி உள்ளது சிறப்பு.
படத்தில் காமெடி காட்சிகள் இருந்தாலும், இன்னும் கொஞ்சம் காமெடியை சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு ஆக்ஷனுக்கும் வித்தியாசமான இசையமைப்பில் கவர்கிறார் இசையமைப்பாளர்.
மொத்தத்தில் ‘மோட்டு பட்லு’ குதூகலம்.
பிடிபட்ட சிங்கத்தை காட்டுக்குள் கொண்டு செல்ல திட்டமிடுகையில், விஞ்ஞானி ஒருவரின் அபூர்வ கண்டுபிடிப்பால் சிங்க பாஷையை புரிந்துகொண்டு, அந்த சிங்கம் எங்கிருந்து வந்தது, அதன் நிலைமை என்ன? என்பதை அறிந்துகொள்கிறார்கள். சர்க்கஸிலேயே வாழ்ந்ததால் அந்த சிங்கத்தை காட்டுக்குள் கொண்டுவிட்டால் அங்குள்ள விலங்குகளால் சிங்கத்துக்கு ஆபத்து ஏற்படும் என்று எண்ணி, அந்த சிங்கத்தை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதேநேரத்தில் காட்டுக்குள் ராஜாவாக வாழ்ந்துவரும் மற்றொரு சிங்கம் ஒன்று, அந்த காட்டை அழிக்க நினைக்கும் வேட்டைக்காரர்களிடமிருந்து தனது கூட்டாளிகளையும், காடுகளையும் காப்பாற்ற போராடுகிறது. அந்த போராட்டத்தில் அந்த சிங்கம் ஒருநாள் வீரமரணம் அடைய, வேட்டைக்காரர்களுக்கு சாதகமாக போய்விடுகிறது.
மோட்டு பட்லுவுக்கு இந்த விஷயம் தெரிந்துவிடவே, தங்களிடம் இருக்கும் சர்க்கஸ் சிங்கத்தை, காட்டு ராஜா சிங்கம் போல் நடிக்க வைத்து காட்டை அழிக்க நினைப்பவர்களை துரத்திவிட நினைக்கிறார்கள். ஆனால், சர்க்கஸ் சிங்கத்துக்கோ கம்பீரமாக கர்ஜிக்க கூட முடியவில்லை. அப்படியிருக்கையில், எப்படி அவர்களை துரத்த முடியும் என்று எண்ணும் மோட்லு, பட்லு சர்க்கஸ் சிங்கத்துக்கு பயிற்சி கொடுக்கிறார்கள்.
இறுதியில், அந்த பயிற்சியில் சர்க்கஸ் சிங்கம் வெற்றி பெற்று, வேட்டைக்காரர்களை விரட்டி காட்டை காப்பாற்றியதா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் தொடரான ‘மோட்டு பட்லு’ திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. கார்ட்டூன் படம் என்று அலட்சியமாக படம் பார்க்க சென்றவர்களுக்கு ஆச்சர்யம்தான் வருகிறது. நம்மையும் அறியாமல் படத்துக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது படம்.
சைவ சிங்கத்துடன் பட்லுவும், மோட்டுவும் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. குழந்தைகளுக்கான படம் என்றாலும் ஆக்ஷன், அட்வெஞ்சர், உணர்வுப்பூர்வமான காட்சிகளும் படத்தில் உண்டு. படத்தில் இடம்பெறும் வசனங்களும் குழந்தைகளின் மனதில் எளிதாக பதியும்படி உள்ளது சிறப்பு.
படத்தில் காமெடி காட்சிகள் இருந்தாலும், இன்னும் கொஞ்சம் காமெடியை சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு ஆக்ஷனுக்கும் வித்தியாசமான இசையமைப்பில் கவர்கிறார் இசையமைப்பாளர்.
மொத்தத்தில் ‘மோட்டு பட்லு’ குதூகலம்.