மனநிலை பாதிக்கப்பட்ட ஷோபிக்கு சிறு வயதில் டயானா என்ற தோழி இருக்கிறாள். தோல் வியாதியால் அவதிப்படும் டயனாவுக்கு வெளிச்சத்தில் இருப்பதற்கு பிடிக்காது. இதனால், எப்போதும் இருட்டிலேயே வாழ்கிறாள். இந்நிலையில், ஒருநாள் டயனா இறந்துபோகிறாள். இருப்பினும், மனநிலை பாதிக்கப்பட்ட ஷோபி அடிக்கடி தனிமையில் அமர்ந்து டயனாவுடன் பேசிக் கொண்டிருப்பதுபோலவே அவளது செயல்பாடுகள் இருக்கின்றன.
இந்நிலையில், ஷோபிக்கு ஒருவருடன் திருமணம் ஆகிறது. அவன் மூலமாக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். பின்னர் ஷோபியின் கணவன் அவரை விட்டுவிட்டு வேறொருத்தியுடன் சென்றுவிடுகிறான். அதன்பிறகு, ஷோபி இரண்டாவது ஒருவனை திருமணம் செய்துகொண்டு, அவன் மூலமாக ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். இந்த இரண்டு குழந்தைகளும் ஒரே வீட்டில் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள்.
இந்நிலையில், அந்த வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி நடமாடுவது ஷோபியின் மகளுக்கு தெரிய வருகிறது. வெளிச்சத்தில் தெரியாத அந்த உருவம், இருட்டில் மட்டுமே தெரிகிறது. இதனால் அங்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதற்கு பயந்துபோன ஷோபியின் மகள் அந்த வீட்டை காலி செய்துவிட்டு தனது ஆண் நண்பருடன் சேர்ந்து தங்கிக் கொள்கிறாள். இருப்பினும், தனது தம்பியையும், அம்மாவையும் அந்த பேயிடம் இருந்து காப்பாற்றுவதற்காக மறுபடியும் வீட்டிற்குள் வருகிறாள். இறுதியில், அந்த பேய் யார்? அவர்களை ஏன் அது பயமுறுத்துகிறது? அந்த பேயிடம் இருந்து இவர்கள் தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் கொண்டுபோய் விட்டார் இயக்குனர் டேவிட் சான்ட்பெர்க். அதன்பிறகு ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களுக்கு திகில் ஏற்படுத்திக் கொண்டேதான் நகர்கிறது. நிறைய காட்சிகள் இருட்டிலேயே படமாக்கியிருந்தாலும், அந்த திகில் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது.
படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒரு திகில் படம் பார்க்க வேண்டும் என்று நினைத்துச் செல்பவர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக ஒரு திகில் அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
குறிப்பாக, லைட்டை ஆப் செய்துவிட்ட பிறகு ஒரு உருவம் தெரிவது போலவும், ஆன் செய்தபிறகு அந்த உருவம் மறைந்துபோவது போலவும், கடைசியில் அந்த உருவம் அருகில் வந்து நிற்கும் காட்சிகள் எல்லாம் திகிலின் உச்சக்கட்டம்.
மொத்தத்தில் ‘லைட்ஸ் அவுட்’ திகில் அனுபவம்.
இந்நிலையில், ஷோபிக்கு ஒருவருடன் திருமணம் ஆகிறது. அவன் மூலமாக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். பின்னர் ஷோபியின் கணவன் அவரை விட்டுவிட்டு வேறொருத்தியுடன் சென்றுவிடுகிறான். அதன்பிறகு, ஷோபி இரண்டாவது ஒருவனை திருமணம் செய்துகொண்டு, அவன் மூலமாக ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். இந்த இரண்டு குழந்தைகளும் ஒரே வீட்டில் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள்.
இந்நிலையில், அந்த வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி நடமாடுவது ஷோபியின் மகளுக்கு தெரிய வருகிறது. வெளிச்சத்தில் தெரியாத அந்த உருவம், இருட்டில் மட்டுமே தெரிகிறது. இதனால் அங்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதற்கு பயந்துபோன ஷோபியின் மகள் அந்த வீட்டை காலி செய்துவிட்டு தனது ஆண் நண்பருடன் சேர்ந்து தங்கிக் கொள்கிறாள். இருப்பினும், தனது தம்பியையும், அம்மாவையும் அந்த பேயிடம் இருந்து காப்பாற்றுவதற்காக மறுபடியும் வீட்டிற்குள் வருகிறாள். இறுதியில், அந்த பேய் யார்? அவர்களை ஏன் அது பயமுறுத்துகிறது? அந்த பேயிடம் இருந்து இவர்கள் தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் கொண்டுபோய் விட்டார் இயக்குனர் டேவிட் சான்ட்பெர்க். அதன்பிறகு ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களுக்கு திகில் ஏற்படுத்திக் கொண்டேதான் நகர்கிறது. நிறைய காட்சிகள் இருட்டிலேயே படமாக்கியிருந்தாலும், அந்த திகில் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது.
படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒரு திகில் படம் பார்க்க வேண்டும் என்று நினைத்துச் செல்பவர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக ஒரு திகில் அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
குறிப்பாக, லைட்டை ஆப் செய்துவிட்ட பிறகு ஒரு உருவம் தெரிவது போலவும், ஆன் செய்தபிறகு அந்த உருவம் மறைந்துபோவது போலவும், கடைசியில் அந்த உருவம் அருகில் வந்து நிற்கும் காட்சிகள் எல்லாம் திகிலின் உச்சக்கட்டம்.
மொத்தத்தில் ‘லைட்ஸ் அவுட்’ திகில் அனுபவம்.