பெற்றோரை இழந்த நாயகன் வாசன், நண்பர்களுடன் சேர்ந்து சொந்த ஊரிலேயே கிடைத்த வேலைகளை செய்து வாழ்ந்து வருகிறார். குறிப்பாக, ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பெரிய தொழிலதிபர் சொல்லும் சிறு சிறு வேலைகளையும் செய்து வருகிறார்கள். சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் பணம் இருந்தால் போதும் என்ற வகையில் அவரது வாழ்க்கை நகர்கிறது.
இந்த சூழ்நிலையில் நாயகி மிருதுளாவை பார்க்கும் நாயகன் அவள் மீது காதல் கொள்கிறார். இருந்தும் தனது காதலை அவளிடம் சொல்லாமல் தூரத்தில் இருந்தே ரசிக்க ஆரம்பிக்கிறார்.
இதற்கிடையில், நாயகனுக்கு ரியல் எஸ்டேட் அதிபருக்கு நெருக்கமான ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அவர் ஒரு நிலத்து பத்திரத்தை தனக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் முடித்துக் கொடுத்தால் நாயகனுக்கு ஒரு பெரிய தொகையை கமிஷனாக கொடுப்பதாக கூறுகிறார். நாயகனும், ஆசையில் அந்த பத்திரப்பதிவை கச்சிதமாக செய்து முடிக்கிறார். இது ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆத்திரத்தை கொடுக்கிறது.
அந்த ஆத்திரத்தின் விளைவு என்ன? நாயகன் தனது காதலை நாயகியிடம் சொல்லி அவருடன் சேர்ந்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
நாயகன் வாசன், ஒரு நாயகனுக்குண்டான வசீகரம் இல்லாவிட்டாலும், நடிப்பிலாவது பாஸ்மார்க் பெறுவார் என்று எதிர்பார்த்தால் அதிலும் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறார். குறிப்பாக இவருக்கு சுத்தமாக ரொமான்ஸே வரவில்லை. இருந்தும் இயக்குனர் ஏன்தான் ரொமான்ஸ் காட்சிகளை அவருக்கு வைத்தார் என்று தெரியவில்லை.
நாயகி மிருதுளா விஜய் பார்க்க அழகாக இருக்கிறார். ஓரளவுக்கு தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ரோகினி படத்தின் ஆரம்பத்திலும், இடையில் ஒரு சில காட்சிகளும் வருகிறார். அவர் தனக்குண்டான நடிப்பை அழகாக வெளிப்படுத்திருக்கிறார். மற்றபடி, எந்த கதாபாத்திரங்களும் மனதில் நிற்கவில்லை.
இயக்குனர் சரவணபாண்டியன், இந்த படத்தில் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்பதால், விவசாயம் பாதிக்கப்படுகிறது என்ற சமூக சிந்தனையுடன் இந்த படத்தை எடுக்க நினைத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே இந்த விஷயத்தை கூறும் இயக்குனர், அதன்பிறகு கதையை வேறு திசைக்கு நகர்த்தி விடுகிறார். கடைசிவரை அவர் சொல்ல நினைத்ததை சொல்லாமலேயே படத்தை முடித்திருக்கிறார். அந்த கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு கதையை நகர்த்தி சென்றிருந்தால் ஓரளவுக்கு ரசித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
கிஷோர் குமாரின் பின்னணி இசை எடுபடவில்லை. பாடல்களும் பெரிதளவில் ஈர்க்கவில்லை.
மொத்தத்தில் ‘ஜெனீபர் கருப்பையா’ வெறுப்பு.
இந்த சூழ்நிலையில் நாயகி மிருதுளாவை பார்க்கும் நாயகன் அவள் மீது காதல் கொள்கிறார். இருந்தும் தனது காதலை அவளிடம் சொல்லாமல் தூரத்தில் இருந்தே ரசிக்க ஆரம்பிக்கிறார்.
இதற்கிடையில், நாயகனுக்கு ரியல் எஸ்டேட் அதிபருக்கு நெருக்கமான ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அவர் ஒரு நிலத்து பத்திரத்தை தனக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் முடித்துக் கொடுத்தால் நாயகனுக்கு ஒரு பெரிய தொகையை கமிஷனாக கொடுப்பதாக கூறுகிறார். நாயகனும், ஆசையில் அந்த பத்திரப்பதிவை கச்சிதமாக செய்து முடிக்கிறார். இது ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆத்திரத்தை கொடுக்கிறது.
அந்த ஆத்திரத்தின் விளைவு என்ன? நாயகன் தனது காதலை நாயகியிடம் சொல்லி அவருடன் சேர்ந்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
நாயகன் வாசன், ஒரு நாயகனுக்குண்டான வசீகரம் இல்லாவிட்டாலும், நடிப்பிலாவது பாஸ்மார்க் பெறுவார் என்று எதிர்பார்த்தால் அதிலும் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறார். குறிப்பாக இவருக்கு சுத்தமாக ரொமான்ஸே வரவில்லை. இருந்தும் இயக்குனர் ஏன்தான் ரொமான்ஸ் காட்சிகளை அவருக்கு வைத்தார் என்று தெரியவில்லை.
நாயகி மிருதுளா விஜய் பார்க்க அழகாக இருக்கிறார். ஓரளவுக்கு தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ரோகினி படத்தின் ஆரம்பத்திலும், இடையில் ஒரு சில காட்சிகளும் வருகிறார். அவர் தனக்குண்டான நடிப்பை அழகாக வெளிப்படுத்திருக்கிறார். மற்றபடி, எந்த கதாபாத்திரங்களும் மனதில் நிற்கவில்லை.
இயக்குனர் சரவணபாண்டியன், இந்த படத்தில் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்பதால், விவசாயம் பாதிக்கப்படுகிறது என்ற சமூக சிந்தனையுடன் இந்த படத்தை எடுக்க நினைத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே இந்த விஷயத்தை கூறும் இயக்குனர், அதன்பிறகு கதையை வேறு திசைக்கு நகர்த்தி விடுகிறார். கடைசிவரை அவர் சொல்ல நினைத்ததை சொல்லாமலேயே படத்தை முடித்திருக்கிறார். அந்த கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு கதையை நகர்த்தி சென்றிருந்தால் ஓரளவுக்கு ரசித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
கிஷோர் குமாரின் பின்னணி இசை எடுபடவில்லை. பாடல்களும் பெரிதளவில் ஈர்க்கவில்லை.
மொத்தத்தில் ‘ஜெனீபர் கருப்பையா’ வெறுப்பு.