அனாதையான நாயகன் குப்பை பொறுக்கும் வேலை செய்து வருகிறார். இவரது வாழ்வின் லட்சியமே எப்படியாவது, எதையாவது செய்து கோடீஸ்வரனாக வேண்டும் என்பதுதான். இதற்காக தன்னுடன் குப்பை பொறுக்கும் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா பொட்டலம் விற்பது போன்ற சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்து வருகிறார். இருப்பினும், நாயகனுக்கு மனசாட்சி உறுத்தவே, நேர்மையான முறையில் கோடீஸ்வரனாக முயற்சி செய்கிறார். இருந்தாலும் பணத்துக்காக எதையும் செய்ய துணிந்தவராக இருந்து வருகிறார்.
இதற்கிடையில், மிகப்பெரிய செல்வந்தரின் மகளான நாயகியை அவரது அப்பாவின் நெருங்கிய நண்பர் பணத்திற்காக கடத்திக் கொண்டு போய்விடுகிறார். பின்னர், அவரது அப்பாவையும் கொலை செய்துவிடுகிறார். நாயகி ஒரு குடிசையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விஷயம் நண்பன் மூலமாக நாயகனுக்கு தெரிய வருகிறது. அவளை கடத்தினால் அவள் மூலமாக தங்களுக்கு பெரிய தொகை கிடைக்கும் என்று அவளை கடத்த திட்டம் போடுகிறார்கள்.
அதன்படி, நாயகியை கடத்தி ஒரு காட்டுக்குள் கொண்டுபோய் ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். நாயகன் மற்றும் அவரது நண்பர்கள்தான் கடத்தியிருக்கிறார்கள் என்ற விஷயம் வில்லன் கும்பலுக்கு தெரிகிறது. இதனால், அவர்களை தேடி அலைகிறார்கள். அதேகட்டத்தில், போலீசும் நாயகியையும், அவளை கடத்திய கும்பலையும் தேடி அலைகிறது.
வில்லன் கும்பலுக்கு நாயகியை தாங்கள்தான் கடத்திய விவரம் தெரிந்துவிட்டதை அறிந்துகொண்ட நாயகன், அவளை விட்டுவிட்டு எப்படியாவது தப்பித்துவிட நினைக்கிறாள். ஆனால், நாயகியோ தன்னை வில்லன் கும்பலிடமிருந்து காப்பாற்றினால், அவன் கேட்கும் தொகையை கொடுப்பதாக அவனிடம் கூறுகிறாள்.
பணத்துக்காக எதையும் செய்ய துணியும் நாயகன், அவளை காப்பாற்றி பெரிய கோடீஸ்வரனாகும் தனது லட்சியத்தை அடைந்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
இந்தியில் வெளிவந்த அதர பழசான ஒரு படத்தை தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆஸ்கார் விருது வென்ற படத்தின் தலைப்பை தமிழில் வைத்துக் கொண்டு வெளிவந்த படம் என்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்று எண்ணி வைத்திருக்கிறார்கள். ஆனால், கொஞ்சம்கூட இந்த படத்தை நம்மால் ரசிக்க முடியவில்லை. படத்தின் கதாநாயகன் முதற்கொண்டு நடித்திருக்கும் எந்தவொரு கதாபாத்திரத்திற்கும் நடிப்பு என்பது சுத்தமாக வரவில்லை. அனைவரின் நடிப்பும் மிகவும் செயற்கையாக இருக்கிறது. அதனால், படத்தை துளியளவும் ரசிக்க முடியவில்லை.
படத்தில் பணத்துக்காக எதையும் செய்ய துணியும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன், பணத்துக்காக கூவம் ஆற்றில் குதிப்பது, லுங்கியை கழட்டிப்போட்டு ஜட்டியோடு நடுரோட்டில் டான்ஸ் போடுவது என அனைத்து சாகசங்களையும் செய்திருக்கிறார். பார்ப்பதற்கு காமெடியாக இருக்கிறதே தவிர, ரசிப்பதற்குத்தான் முடியவில்லை.
படத்தின் இயக்குனர் கதாபாத்திரங்கள் தேர்வில் இருந்து ஒவ்வொரு விஷயத்திலும் கோட்டைவிட்டிருக்கிறார். பாடல்கள் எல்லா படத்தில் இருந்தும் காப்பியடித்து போட்டிருக்கிறார்கள். பின்னணி இசை ஒரே இரைச்சல். ஒளிப்பதிவு தெளிவாக இல்லை.
மொத்தத்தில் ‘ஸ்லம்டாக் கோடீஸ்வரன்’ ரசிக்க முடியவில்லை.
இதற்கிடையில், மிகப்பெரிய செல்வந்தரின் மகளான நாயகியை அவரது அப்பாவின் நெருங்கிய நண்பர் பணத்திற்காக கடத்திக் கொண்டு போய்விடுகிறார். பின்னர், அவரது அப்பாவையும் கொலை செய்துவிடுகிறார். நாயகி ஒரு குடிசையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விஷயம் நண்பன் மூலமாக நாயகனுக்கு தெரிய வருகிறது. அவளை கடத்தினால் அவள் மூலமாக தங்களுக்கு பெரிய தொகை கிடைக்கும் என்று அவளை கடத்த திட்டம் போடுகிறார்கள்.
அதன்படி, நாயகியை கடத்தி ஒரு காட்டுக்குள் கொண்டுபோய் ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். நாயகன் மற்றும் அவரது நண்பர்கள்தான் கடத்தியிருக்கிறார்கள் என்ற விஷயம் வில்லன் கும்பலுக்கு தெரிகிறது. இதனால், அவர்களை தேடி அலைகிறார்கள். அதேகட்டத்தில், போலீசும் நாயகியையும், அவளை கடத்திய கும்பலையும் தேடி அலைகிறது.
வில்லன் கும்பலுக்கு நாயகியை தாங்கள்தான் கடத்திய விவரம் தெரிந்துவிட்டதை அறிந்துகொண்ட நாயகன், அவளை விட்டுவிட்டு எப்படியாவது தப்பித்துவிட நினைக்கிறாள். ஆனால், நாயகியோ தன்னை வில்லன் கும்பலிடமிருந்து காப்பாற்றினால், அவன் கேட்கும் தொகையை கொடுப்பதாக அவனிடம் கூறுகிறாள்.
பணத்துக்காக எதையும் செய்ய துணியும் நாயகன், அவளை காப்பாற்றி பெரிய கோடீஸ்வரனாகும் தனது லட்சியத்தை அடைந்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
இந்தியில் வெளிவந்த அதர பழசான ஒரு படத்தை தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆஸ்கார் விருது வென்ற படத்தின் தலைப்பை தமிழில் வைத்துக் கொண்டு வெளிவந்த படம் என்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்று எண்ணி வைத்திருக்கிறார்கள். ஆனால், கொஞ்சம்கூட இந்த படத்தை நம்மால் ரசிக்க முடியவில்லை. படத்தின் கதாநாயகன் முதற்கொண்டு நடித்திருக்கும் எந்தவொரு கதாபாத்திரத்திற்கும் நடிப்பு என்பது சுத்தமாக வரவில்லை. அனைவரின் நடிப்பும் மிகவும் செயற்கையாக இருக்கிறது. அதனால், படத்தை துளியளவும் ரசிக்க முடியவில்லை.
படத்தில் பணத்துக்காக எதையும் செய்ய துணியும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன், பணத்துக்காக கூவம் ஆற்றில் குதிப்பது, லுங்கியை கழட்டிப்போட்டு ஜட்டியோடு நடுரோட்டில் டான்ஸ் போடுவது என அனைத்து சாகசங்களையும் செய்திருக்கிறார். பார்ப்பதற்கு காமெடியாக இருக்கிறதே தவிர, ரசிப்பதற்குத்தான் முடியவில்லை.
படத்தின் இயக்குனர் கதாபாத்திரங்கள் தேர்வில் இருந்து ஒவ்வொரு விஷயத்திலும் கோட்டைவிட்டிருக்கிறார். பாடல்கள் எல்லா படத்தில் இருந்தும் காப்பியடித்து போட்டிருக்கிறார்கள். பின்னணி இசை ஒரே இரைச்சல். ஒளிப்பதிவு தெளிவாக இல்லை.
மொத்தத்தில் ‘ஸ்லம்டாக் கோடீஸ்வரன்’ ரசிக்க முடியவில்லை.