சூப்பர் ஹீரோ படமான எக்ஸ் மென் பட வரிசையில் 9-வது பாகமாக வெளிவந்திருக்கும் படம் எக்ஸ் மென் அப்போகலிப்ஸ். பல நூற்றாண்டுகளாக பூமிக்கு அடியில் கிடக்கும் அப்போகலிப்ஸ், அதிலிருந்து மீண்டு புதிய உலகத்திற்கு திரும்பி வருகிறார். புதிய உலகத்தின் மாறுதல் அவருக்கு பிடிக்காமல் போகவே, இந்த உலகத்தை அழித்து தனக்கேற்றாற்போல் அமைக்க நினைக்கிறார்.
முந்தைய நூற்றாண்டில் தனக்கு உறுதுணையாக இருந்த 4 ம்யூட்டன்ஸ்களைப் போலவே இந்த புதிய உலகத்திலும் தனக்கு தேவையான 4 ம்யூட்டன்ஸ்களை தேடி புறப்படுகிறார். இறுதியில், 3 ம்யூட்டன்ஸ்களை தேடி கண்டுபிடிக்கும் அவர் 4-வது ம்யூட்டன்ஸை தேடிச் செல்லும்போது, அவரது கண்ணில் மேக்னடோ படுகிறார்.
மேக்னடோ, பழைய சம்பவங்கள் இனிமேல் தனது வாழ்க்கையில் நடக்கக்கூடாது என்று முடிவெடுத்து, தனது குடும்பத்துடன் ஒரு கிராமத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர் பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத விதமாக அவரது சக்தியை பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இவர் ம்யூட்டன் என்று தெரிந்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மேக்னடோ இரும்பு சம்பந்தப்பட்ட எதையும் கட்டுப்படுத்தும் சக்தியை படைத்தவர் என்பதால், அவரை எதிர்க்க போலீஸ் துப்பாக்கிக்கு பதிலாக மரத்தினாலான அம்புகளை எடுத்துச் செல்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக நடக்கும் விபத்தில் மேக்னோடாவின் மகளும், மனைவியும் இறக்கிறார்கள். இதையடுத்து, கோபமடைந்த மேக்னடோ மீண்டும் தனது பழைய பாதையை நோக்கி பயணிக்கிறார்.
மேக்னடோவை சந்திக்கும் அப்போகலிப்ஸ் அவரது பலத்தை இன்னும் அதிகரித்து தன்வசம் சேர்த்துக்கொண்டு புதிய உலகத்தை அழிக்க புறப்படுகிறார். இறுதியில், இவர்கள் இணைந்து இந்த உலகத்தை அழித்து அவர்களுக்கேற்ற உலகத்தை அமைத்துக் கொண்டார்களா? இல்லையா? என்பது மீதிக்கதை.
‘எக்ஸ் மேன்’ படவரிசையில் கடைசியாக வந்த ‘டெட் பூல்’ படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. அதேபோல், எக்ஸ் மேன் அப்போகலிப்ஸ் படத்தை தயாரித்த மார்வலின் கடைசி படமான கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆகையால், இந்த படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த எதிர்பார்ப்பை இந்த படம் ஓரளவுக்கு நிவர்த்தி செய்கிறது.
கடந்த எக்ஸ் மென் படங்களைப் போலவே இந்த படத்திலும் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் வருகின்றன. கிட்டத்தட்ட 16 வருடங்களாக இப்படத்தின் ஒவ்வொரு பாகங்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது. எக்ஸ் மென் வரிசையை தொடங்கிய பிரையன் சிங்கர் தற்போது மீண்டும் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
காமிக்ஸ் புத்தகங்களில் பெரிய வில்லனாக சித்தரிக்கப்பட்ட அப்போகலிப்ஸை இந்த படத்தில் பார்க்கும்போது அந்தளவுக்கு பெரிய வில்லனாக காட்டவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. மற்றபடி, படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கிறது. மேக்னடோவின் பின்னணி காட்சிகள் எல்லாம் சுவாரஸ்யமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மற்ற பாகங்களில் இருப்பதைவிட இதில் புதுப்புது கதாபாத்திரங்கள் வருகின்றன.
அவற்றையெல்லாம் இயக்குனர் அழகாக வேலை வாங்கியிருக்கிறார். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை. கிளைமாக்ஸ் காட்சி எல்லோரும் யூகிக்கும்படி இருப்பதால் சுவாரஸ்யம் இல்லாமல் படம் முடிகிறது.
மொத்தத்தில் ‘எக்ஸ் மென்-அப்போகலிப்ஸ்’ ரசிகர்களுக்கான படம்.
முந்தைய நூற்றாண்டில் தனக்கு உறுதுணையாக இருந்த 4 ம்யூட்டன்ஸ்களைப் போலவே இந்த புதிய உலகத்திலும் தனக்கு தேவையான 4 ம்யூட்டன்ஸ்களை தேடி புறப்படுகிறார். இறுதியில், 3 ம்யூட்டன்ஸ்களை தேடி கண்டுபிடிக்கும் அவர் 4-வது ம்யூட்டன்ஸை தேடிச் செல்லும்போது, அவரது கண்ணில் மேக்னடோ படுகிறார்.
மேக்னடோ, பழைய சம்பவங்கள் இனிமேல் தனது வாழ்க்கையில் நடக்கக்கூடாது என்று முடிவெடுத்து, தனது குடும்பத்துடன் ஒரு கிராமத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர் பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத விதமாக அவரது சக்தியை பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இவர் ம்யூட்டன் என்று தெரிந்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மேக்னடோ இரும்பு சம்பந்தப்பட்ட எதையும் கட்டுப்படுத்தும் சக்தியை படைத்தவர் என்பதால், அவரை எதிர்க்க போலீஸ் துப்பாக்கிக்கு பதிலாக மரத்தினாலான அம்புகளை எடுத்துச் செல்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக நடக்கும் விபத்தில் மேக்னோடாவின் மகளும், மனைவியும் இறக்கிறார்கள். இதையடுத்து, கோபமடைந்த மேக்னடோ மீண்டும் தனது பழைய பாதையை நோக்கி பயணிக்கிறார்.
மேக்னடோவை சந்திக்கும் அப்போகலிப்ஸ் அவரது பலத்தை இன்னும் அதிகரித்து தன்வசம் சேர்த்துக்கொண்டு புதிய உலகத்தை அழிக்க புறப்படுகிறார். இறுதியில், இவர்கள் இணைந்து இந்த உலகத்தை அழித்து அவர்களுக்கேற்ற உலகத்தை அமைத்துக் கொண்டார்களா? இல்லையா? என்பது மீதிக்கதை.
‘எக்ஸ் மேன்’ படவரிசையில் கடைசியாக வந்த ‘டெட் பூல்’ படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. அதேபோல், எக்ஸ் மேன் அப்போகலிப்ஸ் படத்தை தயாரித்த மார்வலின் கடைசி படமான கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆகையால், இந்த படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த எதிர்பார்ப்பை இந்த படம் ஓரளவுக்கு நிவர்த்தி செய்கிறது.
கடந்த எக்ஸ் மென் படங்களைப் போலவே இந்த படத்திலும் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் வருகின்றன. கிட்டத்தட்ட 16 வருடங்களாக இப்படத்தின் ஒவ்வொரு பாகங்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது. எக்ஸ் மென் வரிசையை தொடங்கிய பிரையன் சிங்கர் தற்போது மீண்டும் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
காமிக்ஸ் புத்தகங்களில் பெரிய வில்லனாக சித்தரிக்கப்பட்ட அப்போகலிப்ஸை இந்த படத்தில் பார்க்கும்போது அந்தளவுக்கு பெரிய வில்லனாக காட்டவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. மற்றபடி, படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கிறது. மேக்னடோவின் பின்னணி காட்சிகள் எல்லாம் சுவாரஸ்யமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மற்ற பாகங்களில் இருப்பதைவிட இதில் புதுப்புது கதாபாத்திரங்கள் வருகின்றன.
அவற்றையெல்லாம் இயக்குனர் அழகாக வேலை வாங்கியிருக்கிறார். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை. கிளைமாக்ஸ் காட்சி எல்லோரும் யூகிக்கும்படி இருப்பதால் சுவாரஸ்யம் இல்லாமல் படம் முடிகிறது.
மொத்தத்தில் ‘எக்ஸ் மென்-அப்போகலிப்ஸ்’ ரசிகர்களுக்கான படம்.