கோயம்புத்தூரில் இருந்து சென்னையில் இருக்கும் தாய்மாமா ராதாரவி வீட்டிற்கு வருகிறார் நாயகன் நகுல். வரும் வழியில் நாயகி நிகிஷாவை பார்க்கிறார். நிகிஷாவை ஒரு கும்பல் துரத்துகிறது என்பதை அறிந்த நகுல், அவர்களிடம் இருந்து நிகிஷாவை காப்பாற்றி தன்னுடனே சென்னைக்கு ரெயிலில் அழைத்து வருகிறார்.
சென்னை வந்து இறங்கும்போது நிகிஷா காணாமல் போகிறார். அதிர்ந்துபோன நகுல், பின்னர் தாய்மாமா ராதாரவி வீட்டிற்கு செல்கிறார். இவருக்கும் ராதாரவியின் மகளான ஸ்ருதி ராமகிருஷ்ணனுக்கும் திருமணம் செய்ய நினைக்கிறார் ராதாரவி.
விசா விஷயமாக பாண்டிச்சேரிக்கு செல்லும் நகுல், வழியில் நிகிஷாவை ஒரு கும்பல் துரத்துவதை பார்க்கிறார். பின்னர் மீண்டும் கும்பலிடம் காப்பாற்றுகிறார் நகுல்.
ஒரு பெண்ணுடன் ஓடுவதை அறிந்த ராதாரவி, தன்னுடைய ஆட்களான எம்.எஸ். பாஸ்கர், வையாபுரி ஆகியோரை வைத்து விசாரிக்க சொல்லுகிறார். இந்நிலையில், ராதாரவி சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசையில் பெரிய இயக்குனரான பிரேம்ஜியை அழைத்து கதை சொல்ல சொல்கிறார். பிரேம்ஜி சொல்லும் கதை ராதாரவியின் நிஜ வாழ்க்கை கதையை அப்படியே விவரிக்கிறது. இவர் மூலம் மேலும் பல தகவல்களை தெரிந்து வருகிறார்.
மேலும் நிகிஷா ஒரு கொலையாளி என்பதும், பழைய நினைவுகளை அவர் மறந்து விட்டதாகவும் ராதாரவிக்கும் நகுலுக்கும் தெரிய வருகிறது.
இறுதியில், நிகிஷா கொலையாளியாவதற்கு காரணம் என்ன? நகுல் நிகிஷாவை காப்பாற்றி ஒன்று சேர்ந்தாரா? அல்லது தன்னுடைய தாய் மாமா ராதாரவி மகள் ஸ்ருதி ராமகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் நகுல் வழக்கம்போல் துறுதுறு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார். ரெயிலில் பார்த்த பெண்ணுக்காக இவ்வளவு தூரம் ஓடுவது கொஞ்சம் ஓவராக இருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் நிகிஷாவின் கதாபாத்திரம் சிறப்பாக உள்ளது. மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி ராமகிருஷ்ணனுக்கு பெரியதாக வேலை இல்லை. தாய் மாமாவாக நடித்திருக்கும் ராதாரவி சிறப்பாக நடித்திருக்கிறார். பெரிய இயக்குனராக பிரேம்ஜி நடித்திருக்கிறார். இவரை காமெடிக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் இவருடைய காமெடி படத்தில் எடுபடவில்லை.
படத்தில் இவர்களை தவிர, நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, பஞ்சு சுப்பு, பவர் ஸ்டார் சீனிவாசன், பாண்டு, மயில்சாமி, கும்கி அஸ்வின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார். இவர்கள் அனைவரையும் வைத்து சுவாரஸ்யம் இல்லாமல் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் நாகா வெங்கடேஷ். திறமை வாய்ந்த நடிகர்களை வைத்துக் கொண்டு அவர்களை கையாளத் தெரியாமல் விட்டிருக்கிறார்.
மணி சர்மாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். சஞ்சய் லோக்நாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு ஆறுதல்.
மொத்தத்தில் ‘நாரதன்’ கலகம் இல்லை.
சென்னை வந்து இறங்கும்போது நிகிஷா காணாமல் போகிறார். அதிர்ந்துபோன நகுல், பின்னர் தாய்மாமா ராதாரவி வீட்டிற்கு செல்கிறார். இவருக்கும் ராதாரவியின் மகளான ஸ்ருதி ராமகிருஷ்ணனுக்கும் திருமணம் செய்ய நினைக்கிறார் ராதாரவி.
விசா விஷயமாக பாண்டிச்சேரிக்கு செல்லும் நகுல், வழியில் நிகிஷாவை ஒரு கும்பல் துரத்துவதை பார்க்கிறார். பின்னர் மீண்டும் கும்பலிடம் காப்பாற்றுகிறார் நகுல்.
ஒரு பெண்ணுடன் ஓடுவதை அறிந்த ராதாரவி, தன்னுடைய ஆட்களான எம்.எஸ். பாஸ்கர், வையாபுரி ஆகியோரை வைத்து விசாரிக்க சொல்லுகிறார். இந்நிலையில், ராதாரவி சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசையில் பெரிய இயக்குனரான பிரேம்ஜியை அழைத்து கதை சொல்ல சொல்கிறார். பிரேம்ஜி சொல்லும் கதை ராதாரவியின் நிஜ வாழ்க்கை கதையை அப்படியே விவரிக்கிறது. இவர் மூலம் மேலும் பல தகவல்களை தெரிந்து வருகிறார்.
மேலும் நிகிஷா ஒரு கொலையாளி என்பதும், பழைய நினைவுகளை அவர் மறந்து விட்டதாகவும் ராதாரவிக்கும் நகுலுக்கும் தெரிய வருகிறது.
இறுதியில், நிகிஷா கொலையாளியாவதற்கு காரணம் என்ன? நகுல் நிகிஷாவை காப்பாற்றி ஒன்று சேர்ந்தாரா? அல்லது தன்னுடைய தாய் மாமா ராதாரவி மகள் ஸ்ருதி ராமகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் நகுல் வழக்கம்போல் துறுதுறு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார். ரெயிலில் பார்த்த பெண்ணுக்காக இவ்வளவு தூரம் ஓடுவது கொஞ்சம் ஓவராக இருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் நிகிஷாவின் கதாபாத்திரம் சிறப்பாக உள்ளது. மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி ராமகிருஷ்ணனுக்கு பெரியதாக வேலை இல்லை. தாய் மாமாவாக நடித்திருக்கும் ராதாரவி சிறப்பாக நடித்திருக்கிறார். பெரிய இயக்குனராக பிரேம்ஜி நடித்திருக்கிறார். இவரை காமெடிக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் இவருடைய காமெடி படத்தில் எடுபடவில்லை.
படத்தில் இவர்களை தவிர, நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, பஞ்சு சுப்பு, பவர் ஸ்டார் சீனிவாசன், பாண்டு, மயில்சாமி, கும்கி அஸ்வின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார். இவர்கள் அனைவரையும் வைத்து சுவாரஸ்யம் இல்லாமல் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் நாகா வெங்கடேஷ். திறமை வாய்ந்த நடிகர்களை வைத்துக் கொண்டு அவர்களை கையாளத் தெரியாமல் விட்டிருக்கிறார்.
மணி சர்மாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். சஞ்சய் லோக்நாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு ஆறுதல்.
மொத்தத்தில் ‘நாரதன்’ கலகம் இல்லை.