நாயகன் சித்து மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். அதே விமானத்தில் ஹன்சிகாவும் பயணிக்கிறார். இவரை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார் சித்து. விமானத்தில் அருகருகே உட்கார்ந்து பேசி கொண்டு வருகிறார்கள்.
சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானம், மழை, வெள்ளம் காரணமாக கோவாவில் தரையிறங்குகிறது. கோவாவில் சித்துவின் நண்பனுக்கு திருமணம் நடைபெற இருப்பதால், அங்கு ஹன்சிகாவை அழைத்து செல்கிறார். அங்கு நண்பர்களிடம் ஹன்சிகாவை என்னுடைய மனைவி என்று அறிமுகம் செய்து வைக்கிறார்.
அன்று இரவு தனியாக பீச்சில் இருக்கும் ஹன்சிகாவை, ஒரு கும்பல் கற்பழிக்க முயற்சி செய்கிறது. இந்த கும்பலிடம் இருந்து ஹன்சிகாவை காப்பாற்றுகிறார் சித்து. இதிலிருந்து ஹன்சிகாவிற்கு சித்து மீது காதல் ஏற்படுகிறது. இருவரும் காதலை சொல்லாமல் இருந்து வருகிறார்கள்.
ஒரு வழியாக சென்னைக்கு வரும் இவர்கள், அங்கு ஹன்சிகாவிடம் தன் காதலை சொல்ல சித்து முயற்சி செய்கிறார். அப்போது, ஹன்சிகாவை அழைத்து செல்ல வரும் ஹன்சிகாவின் அண்ணன் அஜய்யை பார்த்தவுடன் அதிர்ந்து போகிறார். ஹன்சிகாவின் அண்ணன் அஜய்யை மூன்று வருடங்களுக்கு முன்பு, சித்துவின் அக்காவான சாயாசிங்கை, காதல் என்ற பெயரில் துன்புறுத்தியதற்காக அவரை அடித்திருக்கிறார். இதனால் அஜய்க்கும் சித்துவுக்கும் முன்பே பகை இருந்து வருகிறது.
ஒருகட்டத்தில் ஹன்சிகாவுக்கு சித்துவின் மீது காதல் ஏற்பட்டுவிடுகிறது. இருப்பினும், இந்த காதலுக்கு அவரது அண்ணன் அஜய் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இறுதியில், அஜய்யை எதிர்த்து ஹன்சிகாவை சித்து எப்படி கரம்பிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக பிரபல நடிகை ஜெயபிரதாவின் மகன் சித்து நடித்திருக்கிறார். இப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படம் என்று தெரியாதளவிற்கு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சி, நடனம் என அனைத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நாயகியான ஹன்சிகா, தன்னுடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுக்க துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
ஹன்சிகாவிற்கு அண்ணனாக நடித்திருக்கும் அஜய், வில்லன் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடைய நடிப்பு படத்திற்கு பலம். மற்ற கதாபாத்திரங்களான நரேன், ஜெகன், ரோகினி ஆகியோர் சிறிதளவே வந்தாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இந்தி மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற ‘இஷ்க்’ என்ற படத்தின் ரீமேக்காக இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். பெரிய நடிகர்கள் படத்திற்கு உண்டான அனைத்து அம்சங்களையும் கொண்டு தரமான படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல்பாதியில் நீளும் காட்சிகளால் ரசிகர்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. அதை ஈடுகட்டும் வகையில் இரண்டாம் பாதியை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்.
அனுப் ரூபனின் இசையில் அழகே அழகே... என்ற மெலொடி பாடல் தாளம் போட வைக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணை கவர்ந்தாலும், கோவா, ஆலப்புழா போன்ற லொக்கேஷன்களை ரொம்ப சாதாரணமாகவே காட்டியுள்ளார்.
மொத்தத்தில் ‘உயிரே உயிரே’ சிறப்பு.
சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானம், மழை, வெள்ளம் காரணமாக கோவாவில் தரையிறங்குகிறது. கோவாவில் சித்துவின் நண்பனுக்கு திருமணம் நடைபெற இருப்பதால், அங்கு ஹன்சிகாவை அழைத்து செல்கிறார். அங்கு நண்பர்களிடம் ஹன்சிகாவை என்னுடைய மனைவி என்று அறிமுகம் செய்து வைக்கிறார்.
அன்று இரவு தனியாக பீச்சில் இருக்கும் ஹன்சிகாவை, ஒரு கும்பல் கற்பழிக்க முயற்சி செய்கிறது. இந்த கும்பலிடம் இருந்து ஹன்சிகாவை காப்பாற்றுகிறார் சித்து. இதிலிருந்து ஹன்சிகாவிற்கு சித்து மீது காதல் ஏற்படுகிறது. இருவரும் காதலை சொல்லாமல் இருந்து வருகிறார்கள்.
ஒரு வழியாக சென்னைக்கு வரும் இவர்கள், அங்கு ஹன்சிகாவிடம் தன் காதலை சொல்ல சித்து முயற்சி செய்கிறார். அப்போது, ஹன்சிகாவை அழைத்து செல்ல வரும் ஹன்சிகாவின் அண்ணன் அஜய்யை பார்த்தவுடன் அதிர்ந்து போகிறார். ஹன்சிகாவின் அண்ணன் அஜய்யை மூன்று வருடங்களுக்கு முன்பு, சித்துவின் அக்காவான சாயாசிங்கை, காதல் என்ற பெயரில் துன்புறுத்தியதற்காக அவரை அடித்திருக்கிறார். இதனால் அஜய்க்கும் சித்துவுக்கும் முன்பே பகை இருந்து வருகிறது.
ஒருகட்டத்தில் ஹன்சிகாவுக்கு சித்துவின் மீது காதல் ஏற்பட்டுவிடுகிறது. இருப்பினும், இந்த காதலுக்கு அவரது அண்ணன் அஜய் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இறுதியில், அஜய்யை எதிர்த்து ஹன்சிகாவை சித்து எப்படி கரம்பிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக பிரபல நடிகை ஜெயபிரதாவின் மகன் சித்து நடித்திருக்கிறார். இப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படம் என்று தெரியாதளவிற்கு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சி, நடனம் என அனைத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நாயகியான ஹன்சிகா, தன்னுடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுக்க துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
ஹன்சிகாவிற்கு அண்ணனாக நடித்திருக்கும் அஜய், வில்லன் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடைய நடிப்பு படத்திற்கு பலம். மற்ற கதாபாத்திரங்களான நரேன், ஜெகன், ரோகினி ஆகியோர் சிறிதளவே வந்தாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இந்தி மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற ‘இஷ்க்’ என்ற படத்தின் ரீமேக்காக இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். பெரிய நடிகர்கள் படத்திற்கு உண்டான அனைத்து அம்சங்களையும் கொண்டு தரமான படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல்பாதியில் நீளும் காட்சிகளால் ரசிகர்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. அதை ஈடுகட்டும் வகையில் இரண்டாம் பாதியை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்.
அனுப் ரூபனின் இசையில் அழகே அழகே... என்ற மெலொடி பாடல் தாளம் போட வைக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணை கவர்ந்தாலும், கோவா, ஆலப்புழா போன்ற லொக்கேஷன்களை ரொம்ப சாதாரணமாகவே காட்டியுள்ளார்.
மொத்தத்தில் ‘உயிரே உயிரே’ சிறப்பு.