நடிகர் விக்ரம் அடுத்ததாக கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோமாளி பட இயக்குனருடன் இணைந்த விக்ரம்
பதிவு: செப்டம்பர் 25, 2019 15:01
பிரதீப் ரங்கநாதன், விக்ரம்
சமீபத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து அஜய் ஞானமுத்து இயக்கும் பெயரிடப்படாத படத்திலும், மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்து மற்றும் மணிரத்னம் ஆகியோரது படங்களுக்கு முன்னர் பிரதீப் ரங்கநாதனின் படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தையும் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கோமாளி படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் அப்படக்குழு சார்பில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு அண்மையில் புதிய கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :