படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருக்கும் நாயகன் சாம் கானுக்கு திருமண ஆசை வருகிறது. ஆனால் அவரது வீட்டில் பெண் பார்ப்பதில் தீவிரம் காட்டாத நிலையில், ஒரு பெண்ணுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. அவருடன் நெருங்கிப் பழக ஒரு நாள் திடீரென்று அந்த பெண் மாயமாகிறாள். இதுபற்றி போலீசில் புகார் அளிக்க, சில மாதங்களுக்கு முன்பே அந்த பெண் இறந்தவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கடைசியில் சாம் கானின் வாழ்க்கையில் நடந்தது என்ன? அவருடன் பழகிய பெண் யார்? அந்த பெண் இறந்தது உண்மையா? அவரது வாழ்க்கையை மாற்றிய தருணங்கள் என்ன? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
இயக்கம், நடிப்பு என இரண்டையும் கவனித்திருக்கிறார் சாம் கான். படத்தின் முதல் பாதி ஓரளவுக்கு விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாவது பாதி தொய்வை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. திவ்யகானா ஜெய்ன், எலிசபெத், ஹமீதா கட்டூன் என அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.
சாந்தன் அன்பாஜாகன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். ஜே.எஸ்,கே-வின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `காதல் மட்டும் வேணா' சத்தியமாக வேண்டாம். #KadhalMattumVena #SamKhan #DivyanganaaJain #Elizabeth