என் மலர்

    செய்திகள்

    பாகிஸ்தான்: போலீஸ் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 7 பேர் பலி
    X

    பாகிஸ்தான்: போலீஸ் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 7 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகிஸ்தானின் குவெட்டா நகரில் போலீஸ் வாகனத்தின் மீது இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீசார் உள்பட 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் குவெட்டா நகரில் போலீஸ் வாகனத்தின் மீது இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீசார் உள்பட 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

    பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் சுமார் 30 போலீசாரை பணிக்கு ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது இன்று காலை 8.30 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    குவெட்டா நகரின் நியூ சரியப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து போலீசார் உள்பட 7 பேர் பலியானதாகவும், 20-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
    Next Story
    ×