என் மலர்

    செய்திகள்

    பாகிஸ்தான்: ஓடும் வேனில் குண்டு வெடித்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பலி
    X

    பாகிஸ்தான்: ஓடும் வேனில் குண்டு வெடித்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகிஸ்தான் நாட்டில் ஓடும் வேனில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் கைபர் மாகாணத்தின் தலைநகராக உள்ள பெஷாவரில் கோதார் என்ற இடத்திலிருந்து  சாடா நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்த வேன் ஒன்று குர்ரான் என்ற ஊரின் அருகே வரும் போது வேனில் இருந்த சக்தி வாய்ந்த குண்டு பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் வேனில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் பெஷாவர் நகர அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை சீல் வைத்துள்ள போலீசார், குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரிமோட் கட்டுப்பாடு மூலம் வெடிக்கும் குண்டுகளை தீவிரவாதிகள்  இத்தாக்குதலில் பயன்படுத்தியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

    இந்த வேன் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இன்னும் எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×