என் மலர்

    செய்திகள்

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் இன்று சிறைப்பிடிப்பு
    X

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் இன்று சிறைப்பிடிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேரை, 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 141 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்களில் பெரும்பாலானோர் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல் வேகமாக வந்தது.

    இதைப்பார்த்த புதுக்கோட்டை மீனவர்கள் பலர் அவசரம், அவசரமாக அங்கிருந்து தங்களது விசைப்படகை நகர்த்தினர். ஆனாலும் மின்னல் வேகத்தில் வந்த இலங்கை கடற்படையினர் செல்வி, விஜயேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர்.

    அதிலிருந்த ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சந்திரபோஸ் (வயது 28), தெய்வகுமார் (20), குகன் (20), பிரவீன் (21), விவேக் (22), விஜயேந்திரன் (34), செல்வநாதன் (60), முருகன் (35), பாண்டி (40) ஆகிய 9 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர்.

    முன்னதாக டி.என். 06 எம்.எம். 1138 என்ற எண் கொண்ட விசைப்படகில் தங்களது ரோந்து கப்பலால் இலங்கை கடற்படையினர் மோதியதில் அந்த படகு பலத்த சேதமடைந்தது. மேலும் 2 விசைப்படகுகளிலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் அபகரித்து கொண்டனர்.

    மேலும் கடலில் மீனவர்கள் விரித்திருந்த வலைகளையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும், அவர்களின் படகுகளுடன் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர்.

    இன்று பிற்பகலில் மீனவர்கள் 9 பேரும் அங்குள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன்பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரிய வரும்.

    கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×