என் மலர்

    செய்திகள்

    கடலூரில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: 41 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    கடலூரில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: 41 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கடலூரில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் 41 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.
    கடலூர்:

    அ.தி.மு.க. நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மதுரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    பின்னர் திருப்பூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. கடலூரில் இன்று மாலை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது.

    இதற்காக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்பட கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

    மேடைக்கு முன்பாக பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கு ஏராளமான சேர்கள் போடப்பட்டுள்ளது.

    மேலும் விழா நிகழ்ச்சிகளை காண 10-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.சி.டி டி.விக்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடங்குகிறது. விழாவுக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார்

    விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைக்கிறார். பின்னர் பல்வேறு விளையாட்டுபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார். மேலும் 41 ஆயிரத்து 608 பயனாளிகளுக்கு ரூ.212 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.

    இதுதவிர ரூ.312 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.50 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.


    விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி, மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அ.தி.மு.க. (அம்மா அணி) மாவட்ட செயலாளர்கள், கடலூர் மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள். முடிவில் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நன்றி கூறுகிறார்.

    முன்னதாக மாலை 4 மணி முதல் 5 மணி வரை எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி நகரின் முக்கிய இடங்களில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பிரமாண்டமான விளம்பர பதாகைகள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன.

    பகலை இரவாக்கும் வகையில் மின்விளக்கு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கொடி, தோரணங்களும் கட்டப்பட்டு நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    முதல்-அமைச்சர் கடலூர் வருவதையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதரன் தலைமையில், டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலையில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம், திருப்பூர், சேலம், பெரம்பலூர் உள்பட 13 மாவட்டங்களை சேர்ந்த 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    Next Story
    ×