என் மலர்

    செய்திகள்

    எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இன்று சிறைப்பிடிப்பு
    X

    எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இன்று சிறைப்பிடிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் இன்று சிறைப்பிடித்தனர்.
    அறந்தாங்கி:

    மீன்களின் இனப்பெருக்கத்திற்காக விதிக்கப்பட்ட மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந்தேதியுடன் முடிந்தது. 61 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு போதிய மீன்பாடு கிடைக்கவில்லை.

    கடந்த வாரம் ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தும் சென்றனர். ஏற்கனவே தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை சிறையில் வாடும் நிலையில் தற்போது மேலும் 6 மீனவர்களை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று அதிகாலை மீன் துறை அலுவலக அனுமதியுடன் 116 விசைப்படகுகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இதில் தண்டபாணி என்பவருக்கு சொந்தமான படகில் சந்தனகுமார், வெற்றி, முகேஷ், நாகராஜ் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்திய கடல் பகுதியான நெடுந்தீவு அருகே வலையை விரித்து மீன்களுக்காக காத்திருந்தனர்.

    அப்போது அங்கு குட்டி ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் மின்னல் வேகத்தில் வந்தனர். அவர்களை பார்த்ததும் அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பலர் வலைகளை சுருட்டிக் கொண்டு புறப்பட்டனர். ஆனாலும் ஒரு படகை மட்டும் இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

    பலமுறை எச்சரித்தும் எங்கள் நாட்டிற்குள் வந்து ஏன் மீன்பிடிக்கிறீர்கள்? என்று திட்டியுள்ளனர். மேலும் அவர்களின் படகுக்குள் தாவிக்குதித்த கடற்படையினர் வலைகளை அறுத்து சேதப்படுத்தியதோடு, மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் எடுத்துக்கொண்டனர்.

    பின்னர் அதிலிருந்த சந்தனகுமார், வெற்றி, முகேஷ், நாகராஜ் ஆகிய 4 மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர், அவர்களுக்கு சொந்தமான படகையும் ரோந்து கப்பலில் கட்டி இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

    அங்குள்ள காங்கேசன் துறை முகாம் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள் இன்று பிற்பகலில் இலங்கை ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னரே அவர்கள் விடுதலையாவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரிய வரும்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு கடலுக்கு சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினரை மட்டுமின்றி சக மீனவர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    Next Story
    ×