செய்திகள்
ஹைட்ரோ கார்பனால் பாதிக்கப்பட்ட நோயாளி போல் சித்தரித்து பொதுமக்கள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஹைட்ரோ கார்பனால் பாதிக்கப்பட்ட நோயாளி போல் சித்தரித்து பொதுமக்கள் போராட்டம் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் தினமும் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாததால் அதிருப்தி அடைந்துள்ள அப்பகுதி பொதுமக்கள், அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடந்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் ஹைட்ரோ கார்ப னால் பாதிக்கப்பட்ட நோயாளி போன்று சித்தரித்து பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் தினமும் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாததால் அதிருப்தி அடைந்துள்ள அப்பகுதி பொதுமக்கள், அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடந்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் ஹைட்ரோ கார்ப னால் பாதிக்கப்பட்ட நோயாளி போன்று சித்தரித்து பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
Next Story