என் மலர்

    செய்திகள்

    அஷ்வினுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைப்பது சந்தேகம்தான் - ஹர்பஜன்சிங் கருத்து
    X

    அஷ்வினுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைப்பது சந்தேகம்தான் - ஹர்பஜன்சிங் கருத்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அஷ்வினுக்கு ஓய்வு அளித்தது போல தெரியவில்லை, என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி: 

    இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை நடக்கிறது.

    ஒருநாள் தொடரில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற, அஷ்வின், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அஷ்வினை வேண்டும் என்றே அணியில் இருந்து நீக்கியதாகத்தான் தெரிகிறது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், ‘தற்போது இந்திய அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களில் ஜடேஜா சிறந்த பீல்டர். தவிர, அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதால், இந்திய அணிக்கு அது மிகப்பெரிய பலம். ஆனால் அஷ்வினைப் பொறுத்தவரையில் அவருக்கு வேண்டும் என்றே இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. யுவராஜ்சிங் உடற்தகுதி இல்லாததால் அணியில் சேர்க்கப்படவில்லை. 

    புதிதாக அணியில் இடம்பிடித்துள்ள குல்தீப் தொடர்ந்து அசத்தும் பட்சத்தில் அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் இடங்களுக்கு நெருக்கடி ஏற்படும். ஜடேஜா சிறந்த பீல்டர் என்பதால் அவருக்கு தான் அதிக வாய்ப்பு கிடைக்கும். எனவே அஷ்வினுக்கு அடுத்து அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் தான்.’ என்றார்.
    Next Story
    ×