என் மலர்

    செய்திகள்

    நாடு முழுவதும் ‘பத்மாவத்’ படத்தை திரையிட சுப்ரீம் கோர்ட் அனுமதி
    X

    நாடு முழுவதும் ‘பத்மாவத்’ படத்தை திரையிட சுப்ரீம் கோர்ட் அனுமதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள ‘பத்மாவத்’ திரைப்படத்தை அனைத்து மாநிலங்களிலும் திரையிட இன்று அனுமதியளித்த சுப்ரீம் கோர்ட் குஜராத், ராஜஸ்தான் மாநிலம் அறிவித்த தடைக்கும் தடை விதித்துள்ளது. #Padmaavat #DeepikaPadukone #SupremeCourt
    சித்தூர் ராணி பத்மினியின் கதை 'பத்மாவத்' என்ற பெயரில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் இடையே எழுந்த எதிர்ப்பு காரணமாக பல்வேறு மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டது. சென்சார் போர்டும் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் படத்தின் பெயர் 'பத்மாவத்' என்றும் காட்சிகளில் மாற்றம் செய்தும் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து சென்சார் போர்டு அனுமதி வழங்கியது.



    வருகிற 25-ந்தேதி 'பத்மாவத்' படம் நாடு முழுவதும் திரையிடப்படுகிறது. தற்போது மீண்டும் எதிர்ப்பு கிளம்பியதால் ராஜஸ்தான், குஜராத் மாநில அரசுகள் இந்தப் படத்தை திரையிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளன. அரியானா, மகாராஷ்டிரா, கோவா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் தடைவிதிக்க பரிசீலித்து வருகின்றன.

    இந்த தடையை நீக்க கோரி பத்மாவத் படத்தின் தயாரிப்பாளர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய தணிக்கை குழுவினர் அனுமதி அளித்த பிறகும் பத்மாவத் படத்துக்கு மாநில அரசுகள் தடை விதிப்பது சட்டவிரோதம். எனவே தடையை நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. 

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு ஜனவரி 25-ம் தேதி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பத்மாவத் படத்தை திரையிட அனுமதியளித்து உத்தரவிட்டது.

    சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு இந்தப் படத்தை திரையிட தடை விதித்து முன்னர் குஜராத், ராஜஸ்தான் மாநில அரசுகள் வெளியிட்டிருந்த அறிவிக்கைக்கு (நோட்டிபிகேஷன்) தடை விதித்த நீதிபதிகள். இவ்விவகாரம் தொடர்பாக இனி வேறெந்த மாநில அரசுகளும் அறிவிக்கை வெளியிடவும் தடை விதித்துள்ளனர்.

    மேலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் கடமை என்றும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இவ்வழக்கின் விசாரணையை வரும் மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்தனர். #Padmaavat #DeepikaPadukone #SupremeCourt #tamilnews
    Next Story
    ×