என் மலர்

    செய்திகள்

    பாகிஸ்தான், சீனா எல்லையில் இந்தியா ராணுவ வீரர்கள் தீபாவளி கொண்டாட்டம்
    X

    பாகிஸ்தான், சீனா எல்லையில் இந்தியா ராணுவ வீரர்கள் தீபாவளி கொண்டாட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி இந்திய ராணுவத்தினர் தீபாவளியை கொண்டாடினர்.

    புதுடெல்லி:

    வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி இந்திய ராணுவத்தினர் தீபாவளியை கொண்டாடினர்.

    பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் அருகே அட்டாரியில் உள்ள எல்லைப்பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை கமாண்டர் சுதீப் குமாரும், பாகிஸ்தான் ராணுவ கமாண்டர் பிலால் அகமதுவும் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர். சென்ற ஆண்டு இரு நாட்டினரும் தீபாவளி தினத்தன்று இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை பகிர்ந்துகொள்ளவில்லை.

    இதேபோல இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியையும் இணைக்கிற நாதூ லா கணவாயில் இந்திய - திபெத் எல்லைக் காவல்படையினர் சீனா ராணுவத்தினருக்கு இனிப்புகள் வழங்கினர்.


    Next Story
    ×