என் மலர்

    செய்திகள்

    ஒடிசா: ரூர்கெலா பகுதியில் உள்ள மார்கெட்டில் பயங்கர தீவிபத்து - ஒருவர் உயிரிழப்பு
    X

    ஒடிசா: ரூர்கெலா பகுதியில் உள்ள மார்கெட்டில் பயங்கர தீவிபத்து - ஒருவர் உயிரிழப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒடிசா மாநிலத்தின் ரூர்கெலா பகுதியில் உள்ள மார்கெட்டில் செயல்பட்டுவந்த பட்டாசு கடையில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒருவர் பலியானார்.

    புவனேஸ்வர்:

    இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒடிசா மாநிலத்தின் ரூர்கெலா பகுதியில் தீபாவளி தினத்தையொட்டி மார்கெட்டில் பல கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கடைகளில் அப்பகுதியில் இருந்து வந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்கள் வாங்கி சென்றனர்.

    இந்நிலையில், இன்று காலை சுமார் 2 மணியளவில் அங்குள்ள ஒரு பட்டாசு கடையில் மின்கசிவு காரணமாக தீடிரென தீபிடித்தது. இந்த தீ மளமளவென அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

    உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் 45 பட்டாசு கடைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த தீவிபத்தில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×