என் மலர்

    செய்திகள்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: 2 பேர் உயிரிழப்பு
    X

    உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: 2 பேர் உயிரிழப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் பலியாகினர்.
    நைனிடால்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நைனிடால்-அல்மோரா நெடுஞ்சாலையில் பாவ்ரியாபந்த் என்ற இடத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒருவர் ஹல்த்வானியைச் சேர்ந்த பங்கஜ் (29) என்பது தெரியவந்துள்ளதாக சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.

    இதே நெடுஞ்சாலையில் காயிர்னா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு ஜேசிபி எந்திரம் சிக்கிக்கொண்டது.

    ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலத்தின்போது இந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×