என் மலர்

    செய்திகள்

    சட்டவிரோத பணபரிமாற்றம்: பாகிஸ்தான் தீவிரவாதிக்கு 7 ஆண்டுகள் ஜெயில்
    X

    சட்டவிரோத பணபரிமாற்றம்: பாகிஸ்தான் தீவிரவாதிக்கு 7 ஆண்டுகள் ஜெயில்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிக்கிய பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி முகமது கோயாவிற்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதாக அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டம் 2002-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இது 2005-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க முடியும்.

    இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி முகமது கோயா சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிக்கினார். இந்த வழக்கு கர்நாடக கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதாக அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

    இது குறித்து அமலாக்க பிரிவு அதிகாரிகள் மேலும் கூறுகையில், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஏற்கனவே ஜார்கண்ட் முன்னாள் மந்திரி ஹரி நாராயணன் ராய்க்கு, ராஞ்சி கோர்ட்டு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது. இதையடுத்து அலாவுதீன் என்பவருக்கு கொல்கத்தா கோர்ட்டு தண்டனை அளித்தது. அதன் பிறகு தற்போது 3-வது நபராக தற்போது முகமது கோயாவுக்கு இந்த வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது என்றனர். 
    Next Story
    ×