என் மலர்

    செய்திகள்

    ஜெயலலிதா வழங்கிய காரை அ.தி.மு.க.விடம் ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்
    X

    ஜெயலலிதா வழங்கிய காரை அ.தி.மு.க.விடம் ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டி.டி.வி தினகரன் தலைமையை ஏற்றுள்ளதால் ஜெயலலிதா தனக்கு வழங்கிய இன்னோவா காரை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நாஞ்சில் சம்பத் நேற்று ஒப்படைத்தார். #NanjilSampath #AIADMK
    சென்னை:

    டி.டி.வி தினகரன் தலைமையை ஏற்றுள்ளதால் ஜெயலலிதா தனக்கு வழங்கிய இன்னோவா காரை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நாஞ்சில் சம்பத் நேற்று ஒப்படைத்தார்.

    ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியையும், இன்னோவா கார் ஒன்றையும் அளித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்ற பிறகு, அந்த காரை அ.தி.மு.க. அலுவலகத்தில் நாஞ்சில் சம்பத் ஒப்படைத்தார். சசிகலா சமாதானம் செய்த பின்னர், மீண்டும் காரை பெற்றுக்கொண்டார்.

    தற்போது டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நாஞ்சில் சம்பத், கட்சி தலைமையை விமர்சனம் செய்வதால் அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்ட காரை ஒப்படைக்க வேண்டும் என்று கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து நாஞ்சில் சம்பத் அந்த காரை கட்சி தலைமை அலுவலகத்தில் தன்னுடைய வக்கீல் ஒருவர் மூலம் நேற்று ஒப்படைத்தார்.  #NanjilSampath #AIADMK #tamilnews
    Next Story
    ×