என் மலர்

    செய்திகள்

    கவிஞர் வைரமுத்து மீது ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு
    X

    கவிஞர் வைரமுத்து மீது ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆண்டாள் குறித்து தவறாக கருத்து தெரிவித்ததால் கவிஞர் வைரமுத்து மீது ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    ராயபுரம்:

    ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு இடங்களில் வைரமுத்துவை கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. போலீஸ் நிலையத்திலும் வைரமுத்து மீது புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கொருக்குப்பேட்டையை சேர்ந்த சிவசேனா கட்சியின் சென்னை மண்டல தலைவர் வேணுகோபால் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் வைரமுத்து மீது புகார் தெரிவித்துள்ளார்.

    அதில், வரலாறு தெரியாமல் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்து இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. எனவே வைரமுத்துவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து வைரமுத்து மீது 153(ஏ), 505/2 ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    Next Story
    ×